
‘’பாலியல் தொழிலில் பெண்களை ஈடுபடுத்தும் குற்றவாளிகளுக்கு ஜாமீன் கேட்டு வாதாட வரும் உங்களுக்கு எதற்கு மீசை ,’’ என்று வழக்கறிஞர் பாண்டியனை நீதிமன்றம் கேள்வி கேட்டதாகக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி ஒன்றை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Claim Link I Archived Link
இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் (+919049044263 & +91 9049053770) வழியே அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தார்.
உண்மை அறிவோம்:
முதலில், இந்த நியூஸ் கார்டை தந்தி டிவி வெளியிட்டதா என்று தகவல் தேடினோம். நம்மிடம் பேசிய தந்தி டிவி டிஜிட்டல் பிரிவு நிர்வாகி, ‘’இது எங்களது பெயரில் பரவும் போலியான நியூஸ் கார்டு,’’ என்றார்.
இதையடுத்து, அ.தி.ம.மு.க., பொதுச் செயலாளர் மற்றும் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் தரப்பில் விசாரித்தபோது, ‘’சமீபத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக சென்னை மெரீனா கடற்கரை ஒட்டிய கடல் பகுதியில் பேனா நினைவுச் சின்னம் வைப்பது தொடர்பான பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில், சீமான், பேனா நினைவுச் சின்னம் வைத்தால், உடைப்பேன் என்று எச்சரிக்கை விடுத்தார். இதற்கு, அந்த மேடையிலேயே பாண்டியனும் பதிலடி கொடுத்துப் பேசியது, நாம் தமிழர் கட்சியினரிடையே எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பழிவாங்கும் வகையில் மேற்கண்ட போலியான செய்தியை சீமான் ஆதரவாளர்கள் பரப்பி வருகின்றனர்,’’ என்று தெரிவித்தனர்.
இதற்கேற்ப, பாண்டியனின் ட்விட்டர் பக்கம் முழுவதும் சீமான் எதிர்ப்பு பதிவுகள் இடம்பெற்றுள்ளன.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட செய்தி போலியான ஒன்று, என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:மீசை வைக்க தகுதியற்றவர் என்று வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியனை நீதிமன்றம் கண்டித்ததா?
Fact Check By: Fact Crescendo TeamResult: False
