‘முஸ்லிம் ஹோட்டல்களில் உணவை ஹலால் செய்ய எச்சில் துப்பலாம்’ என்று தமிழ்நாடு கோர்ட் கூறியதா?

Update: 2024-09-25 08:20 GMT

‘’முஸ்லிம் ஹோட்டல்களில் உணவை ஹலால் செய்ய எச்சில் துப்பலாம்’’ என்று தமிழ்நாடு கோர்ட் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்: 


இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இந்த பதிவில் ‘’ முஸ்லிம் ஹோட்டல்களில் உணவை ஹலால் ஆக்குவதற்காக எச்சில் துப்புவதை நீதிமன்றம் உறுதிசெய்தது. தமிழ்நாட்டில் ஒரு நீதிமன்ற வழக்கில், சமையற்காரன் துப்பாதவரை ஹலால் முழுமையடையாது என்று முஸ்லிம்கள் வாதிட்டனர். அதனால்தான் முஸ்லிம்கள் தயாரிக்கும் உணவு எச்சில் துப்பாமல் முழுமையடையாது. நீதிமன்ற வழக்கில் அவர் துப்பியதை ஒப்புக்கொண்டார்/
இருந்து.. காபிர்கள் முஸ்லிம்களாகி விடுவார்கள். முஸ்லிம்களின் எச்சிலை சாப்பிட அவர்களின் கடைகளுக்கு போவீர்களா மக்களே.🤑🤑🤑🤑🤑🤑...... வீடியோவை முழுமையாக பார்த்துவிட்டு மானமுள்ள இந்துக்கள் தயவுசெய்து எந்த பொருளையும் இஸ்லாமியர்கள் கடையிலே வாங்க வேண்டாம்......,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

இதனுடன் முஸ்லிம் ஹோட்டல்களில் நடைபெறும் சமையல் தொடர்பான காட்சிகள் கொண்ட வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.


Claim Link l Archived Link

பலரும் இதனை உண்மை என நம்பி, ஃபேஸ்புக், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

திருப்பதி லட்டு தயாரிப்பில் மாடு, பன்றி கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் ஆகியவை கலக்கப்படுவதாக, சர்ச்சை வெடித்துள்ளது.

இதையொட்டி சமூக வலைதளங்களில் இந்து, முஸ்லீம் இடையே கார சார வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சிலர் ஒரு படி மேலே சென்று, ஹலால் பற்றி மேற்கண்ட வகையில் தகவல் பரப்புகின்றனர்.


உண்மையில் இதுபோன்று எந்த கருத்தும் தமிழ்நாட்டு நீதிமன்றங்களில் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி தமிழக அரசின் அதிகாரப்பூர்வ ஃபேக்ட்செக் குழு, மறுப்பு கூறியுள்ளது.

TN Factcheck Link

கடந்த 2021ம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த இந்து மத ஆர்வலர் ஒருவர் அங்குள்ள உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‘’சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசாதம் தயாரிக்க கொள்முதல் செய்யப்படும் வெல்லம் ஹலால் செய்யப்பட்டு, வாங்கப்படுவதாக, தகவல் கிடைத்தது. ஒரு உணவுப் பொருள் மீது எச்சில் துப்புவதே ஹலால் என்று இஸ்லாமிய அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். எனவே, எச்சில் துப்பிய ஹலால் வெல்லம் வாங்கி, பிரசாதம் தயாரிக்கக்கூடாது என்று சபரிமலை கோயில் நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும்,’’ என்று கூறியிருந்தார்.


முழு விவரம் இதோ…

The News Minute l Live Law l Organiser

இந்த வழக்கு பற்றிய தகவலை எடுத்து, அரைகுறை புரிதலுடன் தமிழ்நாட்டை தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் பலரும் வதந்தி பரப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Claim :  முஸ்லிம் ஹோட்டல்களில் உணவை ஹலால் செய்ய எச்சில் துப்பலாம் - தமிழ்நாடு கோர்ட்!
Claimed By :  Social Media User
Fact Check :  FALSE
Tags:    

Similar News