துர்கா ஸ்டாலின் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு வீட்டில் 'கொலு' வைத்துள்ளாரா?

Update: 2024-10-07 15:20 GMT

‘’துர்கா ஸ்டாலின் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு தனது வீட்டில் 'கொலு' வைத்த காட்சி’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:


இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இந்த பதிவில் ‘’ திமுகவினர் சனாதனத்தை வேரறுத்து வேடிக்கை பார்த்த பொழுது ,😂 "’’ என்று எழுதப்பட்டுள்ளது.

Claim Link 1 l Claim Link 2 l Archived Link

மேலும் சிலர், இந்த புகைப்படத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டில் எடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டு, தகவல் பகிர்கின்றனர்.



பலரும் இதனை உண்மை என நம்பி, ஃபேஸ்புக், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நாம் மேற்கண்ட புகைப்படம் எங்கே எடுக்கப்பட்டது என்று ஆய்வு மேற்கொண்டோம். இதுதொடர்பாக, கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 15 அன்று, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் P.K. Sekar Babu, அவரது அதிகாரப்பூர்வ X வலைதள பக்கத்தில் வெளியிட்ட ஒரு பதிவு நமது பார்வைக்கு கிடைத்தது.


இந்த பதிவில், ‘’சென்னை மயிலாப்பூரில் திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்படும் நவராத்திரி பெருவிழாவினை இன்று (15.10.2023) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்களின் துணைவியார் திருமதி. துர்கா ஸ்டாலின் அவர்கள் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து, கொழுவை பார்வையிட்டதோடு (1/2) சகலகலாவல்லி மாலை பூஜையில் கலந்து கொண்ட மாணவ, மாணவியருக்கு நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கினார். உடன் முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன் MP, திரு.மயிலை த.வேலு MLA, அரசு முதன்மை செயலாளர் டாக்டர் க. மணிவாசன், ஆணையர் திரு.முரளீதரன் கலந்து கொண்டனர்.(2/2) ,’’ என்று சேகர்பாபு குறிப்பிட்டுள்ளார். 

இதன்மூலமாக, மேற்கண்ட துர்கா ஸ்டாலின் ‘கொலு’ புகைப்படம், பொது நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட ஒன்று எனவும், மு.க.ஸ்டாலின் வீட்டிற்கும், இதற்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் தெரியவருகிறது.

மேலும், இதுதொடர்பாக, நாம் அமைச்சர் சேகர்பாபு அலுவலகத்தை தொடர்புகொண்டு பேசி உறுதிபடுத்தியுள்ளோம்.

Full View

கூடுதல் ஆதாரத்திற்காக, இதுபற்றி ஊடகங்களில் வெளியான செய்திகளை இங்கே இணைத்துள்ளோம். Dailythanthi l Indian Express Tamil


எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படம் பற்றிய தகவல் தவறான ஒன்று, என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Claim :  நவராத்திரி பண்டிகை - வீட்டில் 'கொலு' வைத்த துர்கா ஸ்டாலின்!
Claimed By :  Social Media User
Fact Check :  MISLEADING
Tags:    

Similar News