‘அயோத்தி ராமர் கோயில் திறந்த பிறகே நாட்டில் குற்றங்கள் அதிகரிப்பு’ என்று   மதுரை ஆதீனம் கூறினாரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

‘’அயோத்தி ராமர் கோயில் திறந்த பிறகே நாட்டில் குற்றங்கள் அதிகரிப்பு’’ என்று மதுரை ஆதீனம் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ராமர் கோயில் – மதுரை ஆதீனம் வேதனை. ராமர் கோயில் திறப்பிற்குப் பின்தான் நாட்டில் ரயில் விபத்துகள்; சிறுமிகள் வன்கொடுமை என கொடும் நிகழ்வுகள் அதிகம் நடக்கின்றன –  மதுரை ஆதீனம் வேதனை,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link l Archived Link 

புதிய தலைமுறை லோகோவுடன் உள்ளதால், இதனை பலரும் உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  

உண்மை அறிவோம்:

புதுச்சேரியில் 9 வயது சிறுமி கடத்தப்பட்டு, வன்கொடுமை செய்து, கொடூரமாகக் கொன்று கால்வாயில் தூக்கி வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Maalaimalar Link l Hindu Tamil Link

இந்நிலையில், ‘அயோத்தி ராமர் கோயில் திறப்பிற்குப் பின்தான் நாட்டில் இதுபோன்று சிறுமிகள் வன்கொடுமை அதிகம் நடக்கின்றன,’ என்று மதுரை ஆதீனம் வேதனை தெரிவித்ததாக, மேற்கண்ட வகையில் சிலர் செய்தி பரப்புகின்றனர். 

ஆனால், இதனை புதிய தலைமுறை ஊடகம் வெளியிடவில்லை. இதுபற்றி அவர்களது டிஜிட்டல் பிரிவு நிர்வாகியிடம் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம். 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டை புதிய தலைமுறை வெளியிடவில்லை என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram 

Avatar

Title:‘அயோத்தி ராமர் கோயில் திறந்த பிறகே நாட்டில் குற்றங்கள் அதிகரிப்பு’ என்று மதுரை ஆதீனம் கூறினாரா?

Fact Check By: Fact Crescendo Team 

Result: False