வக்ஃப் மசோதா நிறைவேறியதால் அசாதுதீன் ஒவைசி கண்ணீர் விட்டு அழுதாரா?

‘’வக்ஃப் மசோதா நிறைவேறியதால் அசாதுதீன் ஒவைசி கண்ணீர் விட்டு அழுதார்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ நேற்றைய மிகவும் திருப்திகரமான காணொளி.  இந்த ரஸாக்கர் ₹3000 கோடி மதிப்புள்ள வக்ஃப் சொத்துக்களில் மீது அமர்ந்திருக்கிறார்.  இப்போது அனைத்தையும் திரும்பப் பெறப்படும். அவரால் உரிமை கோரக்கூட முடியாது. […]

Continue Reading

மியான்மர் நிலநடுக்கத்தின் போது குழந்தைகளைக் காப்பாற்றிய செவிலியர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

மியான்மர் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது மருத்துவமனையில் குழந்தைகள் வார்டில் இருந்த செவிலியர்கள் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏதும் ஆகிவிடக்கூடாது என்று பாதுகாத்த காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நிலடுக்கத்தின் போது பச்சிளம் குழந்தைகளை இரண்டு செவிலியர்கள் பாதுகாக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நிலநடுக்கத்தின் போது ளதன்னுயிரை பொருட்படுத்தாமல் பச்சிளம் குழந்தைகளை பாதுகாத்த செவிலியர்கள் 🔥💪♥️ மியான்மர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் […]

Continue Reading