ஈபிள் டவர் பற்றி எரிவது போன்று பரவும் புகைப்படம் உண்மையா?

Altered சர்வதேச அளவில் I International

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள ஈபிள் டவர் தீப்பிடித்து எரிந்தது போன்று ஒரு புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

தினமலர் நாளிதழ் வெளியிட்ட நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “ஈபிள் டவரில் தீப்பற்றியது! பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் ஈபிள் கோபுரத்தில் இன்று தீப்பற்றியது. இதையடுத்து அவசர நடவடிக்கையாக, சுற்றுலாப்பயணிகள் 12 ஆயிரம் பேர், பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்டனர்” என்று இருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

2024 டிசம்பர் 24ம் தேதி பாரீஸ் நகரில் உள்ள ஈபிள் டவரில் தீ பற்றியதற்கான அலாரம் அடித்ததைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றப்பட்டனர் என்று செய்தி வெளியானது. ஆனால், நாம் ஆய்வு செய்யும் புகைப்படத்தைப் பார்க்கும் போது முழு கோபுரமும் தீப்பற்றி எரிந்தது போல உள்ளது. இந்த படம் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதால், இது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம்.

முதலில் ஈபிள் டவரில் ஏற்பட்ட தீவிபத்து தொடர்பான செய்தியை தேடி எடுத்தோம். சர்வதேச ஊடகங்களில், ‘’டிசம்பர் 24ம் தேதி பாரீஸ் நேரப்படி காலை 10.30 மணி அளவில், தீ பற்றினால் ஏற்படும் அலாரம் அடித்தது. அதைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் 1200 பேர் வெளியேற்றப்பட்டனர். அதைத் தொடர்ந்து எங்கு தீ பற்றியது என்று தீயணைப்பு படை வீரர்கள் தீவிரமாக தேடினார்கள், அவர்களால் அதைக் கண்டறிய முடியவில்லை,’’ குறிப்பிடப்பட்டிருந்தது. 

உண்மைப் பதிவைக் காண: express.co.uk I Archive I hola.com I Archive

மின் தூக்கி மின் இணைப்பு பகுதியில் ஷார்ட் சர்க்கியூட் ஆனதால் தீ விபத்து அலாரம் அடித்திருக்கலாம். ஈபிள் டவரில் தீ பற்றவில்லை, இருப்பினும் பயணிகள் பாதுகாப்பில் ரிஸ்க் எடுக்க முடியாது என்பதால் அனைவரும் வெளியேற்றப்பட்டனர் என்று ஈபிள் டவர் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகச் செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், பாரீசில் ஈபிள் டவருக்கு சில கி.மீ தொலைவில் ஒரு கட்டிடத்தில் தீவிபத்து ஏற்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து ஈபிள் டவரில் அலாரம் அடித்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது என்றும் செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. மற்றபடி தீப்பற்றி எரிந்தது போன்று எந்த செய்தியும், புகைப்படமும் கிடைக்கவில்லை.

உண்மைப் பதிவைக் காண: freepik.com I Archive

தினமலர் நியூஸ் கார்டில் உள்ள புகைப்படத்தை மட்டும் தனியாக எடுத்து கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றி தேடிப் பார்த்தோம். அப்போது அது செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படம் என்று தெரிந்தது. புகைப்படத்தின் மீது தெளிவாக ஏஐ புகைப்படம் என்று குறிப்பிட்டிருந்தனர். ஈபிள் டவரில் தீ விபத்து என்ற செய்தியை கேட்டதும் முழு கோபுரமும் தீப்பற்றி எரிவது போன்ற ஏஐ புகைப்படத்தை வைத்து செய்தி வெளியிட்டிருப்பது தெரியவந்தது. இதன் மூலம் செய்தி உண்மை; ஆனால் புகைப்படம் தவறானது என்பது உறுதியாகிறது.

முடிவு:

ஈபிள் டவரில் அலாரம் அடித்ததால் ஏற்பட்ட பதற்றம் தொடர்பான செய்திக்கு அந்த கோபுரமே தீப்பற்றி எரிந்தது போன்று புகைப்படத்தை வைத்து நியூஸ் கார்டு வெளியிட்டிருப்பது தவறான புரிதலை ஏற்படுத்தும் உள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு உண்மையுடன் தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்பதை தகுந்த  ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:ஈபிள் டவர் பற்றி எரிவது போன்று பரவும் புகைப்படம் உண்மையா?

Written By: Chendur Pandian 

Result: Altered