‘’ சென்னை மக்களுக்கு நிவாரணத் தொகை தரக் கூடாது,’’ என்று அண்ணாமலை கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ எங்களுக்கு ஓட்டு போடாத சென்னை மக்களுக்கு மோடி எதுக்கு 5000 கோடி தரணும்? நிவாரண நிதி தர முடியாது,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதன் நடுவே அண்ணாமலையின் புகைப்படம் உள்ளதால், அவர்தான் இவ்வாறு கூறியதாகப் பலரும் நம்பி, இதனை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சென்னை மாநகர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் சமீபத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்பு தொடர்பாக, சமூக வலைதளங்களில் அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட ரீதியாகவும் பல்வேறு காரசார விவாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இந்த சூழலில், பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை தொடர்பாகவும் அவ்வப்போது சில வதந்திகள் பகிரப்படுகின்றன. அவை பற்றி நாமும் ஃபேக்ட்செக் செய்திருக்கிறோம்.

Fact Crescendo Tamil Link

இந்த வரிசையில் பகிரப்படும் மற்றொரு வதந்திதான் மேலே நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட செய்தியும். ஆம், அண்ணாமலை இவ்வாறு எந்த வேண்டுகோளும் மோடிக்கு விடுக்கவில்லை.

இதுபற்றி நாம் பாஜக ஐ.டி. பிரிவு தரப்பில் கேட்டபோது, ‘’சமீபத்தில் ஊடகத்தினரிடம் பேசிய அண்ணாமலை ‘மத்திய அரசு 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டிற்கு 561 கோடி ஒதுக்கியுள்ளது; தமிழக அரசு கேட்ட ரூ. 5060 கோடி மத்தியக் குழுவின் ஆய்வுக்குப் பின் கிடைக்கும்’, என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த செய்தியை சிலர் தவறாக திரித்து, வேண்டுமென்றே அரசியல் உள்நோக்கத்துடன் மேற்கண்ட வகையில் வதந்தி பரப்புகின்றனர்,’’ என்றனர்.

எனவே, அண்ணாமலை பெயரில் வேண்டுமென்றே இவ்வாறு போலியான செய்தியை பரப்பி வருகின்றனர் என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:சென்னை மக்களுக்கு நிவாரணத் தொகை தரக் கூடாது என்று அண்ணாமலை கூறினாரா?

Written By: Fact Crescendo Team

Result: False