ஆவணக் காப்பகம்

டெல்லியில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் யமுனை ஆரத்தி தொடங்கப்பட்டதா?

டெல்லியில் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் பாஜக ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து யமுனை நதிக்கு ஆரத்தி காட்டுவது மீண்டும் தொடங்கப்பட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஆற்றுக்கு ஆரத்தி எடுத்த வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டெல்லியில் பாஜக ஆட்சி 27 ஆண்டுகளுக்குப் பிறகு அமைந்ததைத் தொடர்ந்து யமுனை ஆற்றங்கரையில் யமுனா ஆரத்தி மீண்டும் தொடங்கியது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். உண்மை அறிவோம்: […]

Continue Reading

கிராமத்தை அழித்து நடிகர் விஜய் கட்டிய பள்ளிக்கூடம் என்று பரவும் புகைப்படங்கள் உண்மையா?

அழகிய பசுமையான கிராமத்தை அழித்து நடிகரும் தவெக தலைவருமான விஜய் கட்டிய பள்ளிக் கூடம் என்று இரண்டு புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வயல்வெளி போன்று இருக்கும் இடம் ஒன்றின் புகைப்படம் மற்றும் பள்ளிக் கூட கட்டிடம் ஒன்றின் புகைப்படத்தை ஒன்று சேர்த்து ஒரே புகைப்படமாக சேர்த்து நடிகர் விஜய்யின் பள்ளி அமைவதற்கு முன்பு, கட்டிய பிறகு என்று […]

Continue Reading

“அண்ணாமலைக்கு விஜயகாந்த் நிலைதான் ஏற்படும்” என்று ஜவாஹிருல்லா எச்சரிக்கை விடுத்தாரா?

அண்ணாமலைக்கு நாவடக்கம் தேவை இல்லை என்றால் விஜயகாந்த்துக்கு ஏற்பட்ட கதிதான் ஏற்படும் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும் எம்.எல்.ஏ-வுமான ஜவாஹிருல்லா கூறியது போன்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “எச்சரிக்கை. ஆட்டு குட்டி அண்ணா மலைக்கு நாவடக்கம் தேவை. […]

Continue Reading

கும்பமேளாவில் அமைக்கப்பட்ட கழிப்பறை என்று பரவும் வீடியோ உண்மையா?

கும்பமேளாவில் ரூ.4000 கோடி செலவில் அமைக்கப்பட்ட தற்காலிக கழிப்பறையின் நிலை என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வரிசையாகக் கழிப்பறை கோப்பைகள் அமைக்கப்பட்டிருக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. எந்த மறைவும் இன்றி, வரிசையாக இந்த கழிவறை கோப்பைகள் அமைக்கப்பட்டுள்ளன. நிலைத் தகவலில், “4000 கோடி செலவில் உலகமே வியக்கும் பாத்ரூம் வசதியை கும்பமேளாவில் செய்த எங்கள் […]

Continue Reading

“இந்தியா இந்தி பேசும் மக்கள் வாழும் நாடு” என்று சீமான் கூறினாரா?

இந்தியா என்பது இந்தி பேசும் மக்கள் வாழும் நாடுதான் என்று நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: x.com I Archive சீமானின் பேட்டியின் சில விநாடிகளை மட்டும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர். அதில், “அவரவர்க்கு அவரவர் தாய்மொழி இருக்கிறது. பயன்பாட்டு மொழியா ஆங்கிலம் உள்ளது. தேவை என்றால் இந்தி கற்கலாம். […]

Continue Reading

“ஜெயலலிதாவின் நகைகளை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று அண்ணாமலை கூறினாரா?

ஜெயலலிதாவின் நகை, சொத்துக்களை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அண்ணாமலை புகைப்படத்துடன் நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நகை சொத்துக்களை […]

Continue Reading

சைக்கிள் ஓட்டிய சிறுவனுக்கு அபராதம் விதித்த போலீஸ் என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?

‘’ஹெல்மெட் இல்லாமல், சைக்கிள் ஓட்டிய சிறுவனுக்கு அபராதம் விதித்த போலீஸ்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’சைக்கிள்க்கு பைன்னா… *எங்க போலீஸ் ஸ்காட்லாண்ட் போலீஸ்க்கு இணையாக்கும், அவங்களை மீறி என்ன தைரியம் இருந்தா சைக்கிள் ஓட்டிட்டு போவே ?*,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன், வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.  […]

Continue Reading

டெல்லியில் வெற்றி பெற்றதும் பாஜக மெட்ரோ கட்டணத்தை உயர்த்தியதா?

டெல்லி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற உடன் டெல்லி மெட்ரோ கட்டணத்தை ரூ.60 முதல் 90 வரை உயர்த்திய பாஜக என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ‘டெல்லி மக்களுக்கு நல்ல நாள் முதல் பரிசு நண்பர்களே..!! மெட்ரோ கட்டணம் ₹60முதல் ₹90 வரை உயர்வு மகளிர் இலவச பேருந்து சேவை மூடல் 😄” என்று ஃபேஸ்புக்கில் […]

Continue Reading

‘இந்தி தெரிந்தால்தான் இந்தியன்’ என்று அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

இந்தி தெரிந்தால்தான் இந்தியன் என்று அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை புகைப்படத்துடன் தினமலர் நாளிதழ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “இந்தி தெரிந்தால்தான் இந்தியன் – அண்ணாமலை. இந்திதான் இந்தியாவின் மூத்த மொழி. இந்தி தெரியாதவர்கள் இந்தியர்களே அல்ல. தமிழ்நாட்டைத் தாண்டினால் தமிழில் […]

Continue Reading

திருச்சி டிஐஜி வருண்குமார் தனது மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்தாரா?

‘’மனைவியை பிரிவதாக திருச்சி டிஐஜி வருண்குமார் அறிவிப்பு’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ மனைவியை பிரிவதாக திருச்சி டிஐஜி வருண்குமார் Instagram Story ரவி அறிவிப்பு,’’ என்று எழுதப்பட்டுள்ளது. மேலும், புகைப்படம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.  Claim Link   பலரும் இதனை உண்மை என நம்பி, […]

Continue Reading

உத்தரப் பிரதேசத்தில் குழந்தை வரம் கேட்டு சாக்கடையில் படுத்த பெண் என்ற தகவல் உண்மையா?

‘’உத்தரப் பிரதேசத்தில் குழந்தை வரம் கேட்டு சாக்கடையில் படுத்த பெண்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’கல்யாணம் ஆகி 6 வருஷம் குழந்தை இல்லையாம். அதுக்கு சாக்கடையில் படுக்க வைத்தால் சரியாகும்னு ஒரு ஜோசியக்காரன் சொன்னதை கேட்டு அந்த பொண்ணை சாக்கடையில் ஒரு வாரமா படுக்க வச்சு […]

Continue Reading

வக்ஃப் சொத்துகளை இந்து அறநிலையத்துறை ஆக்கிரமித்துள்ளது என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

இந்து அறநிலையத் துறை, இந்து மடங்கள், கோயில்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வக்ஃப் போர்டு நிலங்கள் மீட்கப்படும் என்று எஸ்டிபிஐ கட்சி தமிழ்நாடு தலைவர் நெல்லை முபாரக் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “முபாரக் செய்தியாளர் சந்திப்பு. இந்து அறநிலதுறை மற்றும் மடங்கள், […]

Continue Reading

பெரியாரை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்தாரா காவ்யா மாறன்?

‘’இப்போது பெரியார் இருந்திருந்தால் நான் அவரை திருமணம் செய்திருப்பேன்’’, என்று காவ்யா மாறன் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ உங்கள் கருத்து என்ன?இப்போது பெரியார் இருந்திருந்தால் நான் அவரை திருமணம் செய்திருப்பேன் *காவ்யா மாறன்*.,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim Link […]

Continue Reading

கும்பமேளாவில் ஜோதிர் மட சங்கராச்சாரியாரை தாக்கிய உ.பி  பாஜக அரசு என்று பரவும் வீடியோ உண்மையா?

கும்பமேளாவில் குளிக்கச் சென்ற சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்தை காவல் துறையை விட்டு உத்தரப்பிரதேச பாஜக அரசு தாக்கியது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive உத்தரகண்ட் மாநிலம் ஜோதிர் ( அல்லது ஜோஷி) சங்கர மடத்தின் தலைவராக இருப்பவர் சுவாமி அவிமுக்தேஷ்வரானந்தா. இவரை போலீசார் தாக்கும் வீடியோவை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “கும்பமேளாவுக்கு குளிக்கச் சென்ற […]

Continue Reading

சிக்கந்தர்மலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று வக்ஃபு போர்டு தலைவர் கூறினாரா?

திருப்பரங்குன்றம் மலை வக்ஃப் போர்டுக்கு சொந்தமானது என்றும், அங்குள்ள ஆக்கிரமிப்பை (முருகன் கோவிலை) அகற்ற வேண்டும் என்று வக்ஃப் போர்டு தலைவர் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “வக்ஃ போர்டு தலைவரின் சர்ச்சை பேச்சு. வக்ஃ போர்டுக்கு சொந்தமான சிக்கந்தர்மலை மீது […]

Continue Reading

விரைவில் திமுகவில் இணையும் விசிக என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

‘’விரைவில் திமுகவில் இணையும் விசிக’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ விரைவில் திமுகவில் இணையும் விசிகவிடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மார்ச் 1ஆம் தேதி கட்சியை கலைத்துவிட்டு மொத்தமாக திமுகவில் இணைய உள்ளதாக தகவல்; முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் பரிசாக கட்சியை திமுகவுடன் இணைக்க […]

Continue Reading

அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படும் இந்தியர்கள் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘’அமெரிக்காவில் இருந்து இராணுவ விமானத்தில் குத்தவச்சு வெளியேற்றப்படும் இந்தியர்கள்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ மோடியின் நண்பன் என டிரம்பை தலையில் தூக்கி வைத்தும், கோவில் கட்டியும் கொண்டாடிய சங்கிகளா… இந்திய நாட்டு பிரஜைகளை நாட்டைவிட்டு துரத்த ஆதரவளித்த அமெரிக்கவாழ் சங்கிகளுக்கு டிரம்ப் வைத்த ஆப்பைப் […]

Continue Reading

சேலம் அரசு மருத்துவமனையில் காவலர் அராஜகம் என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?

‘’சேலம் அரசு மருத்துவமனையில் காவலர் அராஜகம்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ சேலம் அரசு மருத்துவமனையில் #காவலராக பணி அமர்த்தப்பட்ட ரவுடியின் #அராஜகம்! காதில் கேட்க கூடாத வார்த்தைகள் இவனை வேலையை விட்டு தூக்கும் வரை பரப்புங்கள்,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. […]

Continue Reading

நடிகர் கார்த்தியிடம் திரள் நிதி கேட்ட சீமான் என்று பரவும் வீடியோ உண்மையா?

நடிகர் கார்த்தியிடம் திரள் நிதி கேட்டு சீமான் மிரட்டியது போன்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகர் கார்த்திக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போன் செய்து திரள் நிதி கேட்பது போன்றும், சீமான் ஒரு சீட்டிங் ஆசாமி என்று நடிகர் கார்த்தியின் மனசாட்சி கூறுவது போலவும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், […]

Continue Reading

பட்ஜெட் தாக்கல் செய்தபோது தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் நாடாளுமன்றம் வந்தாரா?

‘’பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக, தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் நாடாளுமன்றம் வந்தார்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ பட்ஜெட் தயாரிப்புக்கும் இந்திய தேர்தல் கமிஷனருக்கும் என்ன சம்பந்தம்?  இவனுக்கு அங்க என்ன வேலை.???🤔🤧 நடுவில் ஏன் வந்தார்? தேர்தல் கமிசனர் அடுத்த நிதி அமைச்சரா?,’’ […]

Continue Reading

சேலம் எம்.பி திமுகவில் இருந்து விலகலா?

சேலம் தி.மு.க எம்.பி அக்கட்சியில் இருந்து விலகினார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் தகவல் ஒன்று பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக நாம் ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive எக்ஸ் தளத்தில் யாரோ வெளியிட்டிருந்த விலகல் அறிவிப்பு ஒன்றுடன் கூடிய பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. அதில், “சேலம் MP திமுகவில் இருந்து விலகல்.. பேரனுக்கு பேனர் வைக்கவும் போஸ்டர் ஒட்டும் நிலை வெகு தொலைவில் […]

Continue Reading

இந்துக்கள் அசைவம் உண்ணக்கூடாது என்று ஹெச்.ராஜா கோரிக்கை விடுத்தாரா?

‘’இந்துக்கள் அசைவம் உண்ணக்கூடாது’’, என்று ஹெச்.ராஜா கோரிக்கை விடுத்ததாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’இந்துக்கள் அசைவம் உண்ணக்கூடாது இந்துக்கள் அசைவ உணவு உண்பதால்தான் திருப்பரங்குறத்தில் ஆடு பலியிடுவதை எந்த தாக்கமும் இல்லாமல் கடந்துபோகிறோம் இனி இந்துக்கள் அசைவ உணவு உண்பதையே மத்திய அரசு தடை செய்ய […]

Continue Reading

பள்ளி, கல்லூரி அருகே விற்கப்படும் பொம்மை வடிவிலான போதைப் பொருள் இதுவா?

தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே பொம்மை வடிவில் போதைப் பொருள் ஒன்று விற்கப்படுவதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிங்க் நிறத்தில் குட்டி டெடி பியர் வடிவிலான பொம்மை ஒரு பிளாஸ்டிக் உறையில் போடப்பட்டிருக்கும் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “உஷார்…உஷார்… புதிய போதைப்பொருள் பள்ளிகளில்… உங்களிடம் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் இல்லாவிட்டாலும் மற்றவர்களுக்காக பாசத்திற்குரிய […]

Continue Reading

நாம் தமிழர் கட்சியை தடை செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தாரா?

‘’நாம் தமிழர் கட்சியை தடை செய்ய வேண்டும்’’, என்று மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்ததாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’நாதகவை தடை செய்ய கோரிக்கைகலவரத்தை தூண்டும் வகையில் சீமான் செயல்படுவதால், நாதக கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். –  திமுக ஒருங்கிணைப்புக்குழு சார்பில் ஸ்டாலின் மனு! […]

Continue Reading

தி.மு.க ஆட்சியில் நடக்கும் ரேஷன் கடை முறைகேடு என்று பரவும் வீடியோ உண்மையா?

தி.மு.க ஆட்சியில் ரேஷன் கடையில் அரிசி விற்பனையில் முறைகேடு நடக்கிறது என்று ஒரு வீடியோவை அதிமுக-வினர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: threads.net I Archive ரேஷன் கடையில் அரிசியை எடை போடும் போது எடைக் கல்லை வைத்து ரேஷன் கடை ஊழியர் முறைகேடு செய்யும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “விடியா திமுகமாடல் ரேஷன் கடை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. உண்மைப் பதிவைக் காண: […]

Continue Reading

நாதக-வில் இருந்து சாட்டை துரைமுருகன் விலகல் என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

நாதக-வில் இருந்து சாட்டை துரைமுருகன் விலகியதாக ஒரு நியூஸ் கார்டை சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சன் நியூஸ் வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “விலகல். நாதக மாநில ஒருங்கிணைப்பாளர் சாட்டை துரைமுருகன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு. வலதுசாரிகளின் வழிகாட்டுதலில் தமிழுக்கும், தமிழ் தேசியத்திற்கும் சீமான் துரோகம் செய்து வருவதாக அவர் அறிக்கை” […]

Continue Reading

‘சீமானுக்கு முதல்வர் வேண்டுகோள்’ என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

‘’கலைஞரை கூட விமர்சியுங்கள் தயவு செய்து தந்தை பெரியாரை விமர்சிக்க வேண்டாம்’’, என்று சீமானுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ சீமானுக்கு முதல்வர் வேண்டுகோள்! கலைஞரை கூட விமர்சியுங்கள் தயவு செய்து தந்தை பெரியாரை விமர்சிக்க வேண்டாம் சீமானுக்கு முதல்வர் […]

Continue Reading

சிகரெட் வாங்கும் பணத்தை சேமித்து கார் வாங்கியவர், விபத்தில் உயிரிழந்தாரா?

சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தி சிகரெட் வாங்க ஆன பணத்தை சேர்த்து வைத்து கார் வாங்கியவர், கார் விபத்தில் உயிரிழந்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மேஜை முழுக்க நாணயங்கள், பணத்துடன் அடுக்கி வைத்தபடி ஒருவர் அதன் முன்பு இருந்து போஸ் கொடுத்த புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “இந்த மனிதன் கடந்த 6 வருடமாகப் […]

Continue Reading

ஆபத்தான அரசியல் பேசும் சீமான் என்று வெற்றிமாறன் கண்டனம் தெரிவித்தாரா?

‘’ஆபத்தான அரசியல் பேசும் சீமான்’’, என்று இயக்குனர் வெற்றிமாறன் கடும் கண்டனம் தெரிவித்ததாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’சீமான் ஆபத்தான அரசியல் பேசுகிறார்! தந்தை பெரியாருக்கு எதிராக சீமான் அவதூறு பரப்புவது மிகவும் மோசனமாது; அவரின் போக்கு கவலையும் அதிர்ச்சியும் தருவதாக உள்ளது; ஆபத்தான அரசியல் […]

Continue Reading

ஈரோட்டில் திமுகவினரை ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்த மக்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’ ஈரோட்டில் திமுகவினரை ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்த பொதுமக்கள்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ஈரோட்டில் செருப்படி வாங்கிய திமுக.. ஆட்சியில் இருந்து திருடுவதை தவிர வேறு எந்த வேலையும் செய்யாத திமுகவை விரட்டியடித்த பொதுமக்கள்.. #ErodeEastByElection #DMKFailsTN,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 […]

Continue Reading

‘நான் முதல்வரானால் எச். ராஜாவுக்கு முக்கிய பதவி’ என்று சீமான் கூறினாரா?

‘’நான் முதல்வரானால் அப்பா எச் ராஜாவுக்கு முக்கிய பதவி கொடுத்து அழகு பார்ப்பேன்’’, என்று சீமான் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ நான் முதல்வரானால் எச். ராஜாவுக்கு முக்கிய பதவி! பெரியாரின் சூழ்ச்சியால் தான் எச் ராஜா போன்ற பேரறிஞர்கள் தமிழ்நாட்டின் முதல்வராக முடியவில்லை! நான் […]

Continue Reading

‘விடுதலைக்காகப் போராடியது ஆர்.எஸ்.எஸ்’ என்று சீமான் கூறியதாக பரவும் செய்தி உண்மையா?

விடுதலைக்காகப் போராடிய இயக்கம் ஆர்.எஸ்.எஸ் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சீமான், சாவர்க்கர் புகைப்படங்களுடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “விடுதலைக்காக போராடியது ஆர்.எஸ்.எஸ் இயக்கம்! இந்தியாவின் விடுதலைக்காக போராடியது ஆர்.எஸ்.எஸ் இயக்கம் ஆனால், சுதந்திர தினத்தை கருப்பு […]

Continue Reading

சாவர்க்கரை இழிவுபடுத்தி பெரியாரை தூக்கிப்பிடிக்கும் அரசியலை அம்பலப்படுத்த வேண்டாமா என்று சீமான் கேட்டாரா?

‘’சாவர்க்கரை இழிவுபடுத்தி பெரியாரை தூக்கிப்பிடிக்கும் அரசியலை அம்பலப்படுத்த வேண்டாமா?’’, என்று சீமான் கேட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ பெரியாரை அம்பலப்படுத்த வேண்டாமா? தேசத்துக்காக சிறை சென்ற  சாவர்க்கரை இழிவுபடுத்தி சுதந்திரத்தைக் கறுப்புதினம் என்ற பெரியாரைத் தூக்கிப்பிடிக்கும் அரசியலை அம்பலப்படுத்த வேண்டாமா? ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் […]

Continue Reading

கும்பமேளாவில் நீராடிய பிரகாஷ் ராஜ் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

சனாதன தர்மத்திற்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்த நடிகர் பிரகாஷ் ராஜ் தற்போது பிரயாக்ராஜ் கும்பமேளாவில் பங்கேற்று புனித நீராடினார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகர் பிரகாஷ் ராஜ் நதியில் நீராடுவது போன்று புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “கர்த்தரே..இவனை எதுக்கு கும்ப மெளாவுக்கு அனுப்பி வச்ச நீ எங்கய்யா..இங்க?” என்று இருந்தது. நிலைத் […]

Continue Reading

சீமானோடு விவாதிக்க தயாராக இல்லை என்று ஒளிப்பதிவாளர் சந்தோஷ் கூறினாரா?

‘’சீமானோடு விவாதிக்க தயாராக இல்லை’’, என்று ஒளிப்பதிவாளர் சந்தோஷ்’ மறுப்பு கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ சீமானோடு விவாதிக்க தயாராக இல்லை! பிரபாகரன் – சீமான் சந்திப்பு குறித்து நியூஸ் 18-க்கு ஒளிப்பதிவாளர் சந்தோஷ் கொடுத்த நேர்காணலைத் தொடர்ந்து, அவருடன் நேருக்கு நேர் விவாதிக்க நாம் […]

Continue Reading

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் திடீரென்று தோன்றிய தர்கா என்று பரவும் வீடியோ உண்மையா?

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் கடந்த ஓராண்டுக்குள்ளாக திடீரென்று மசூதி ஒன்று கட்டப்பட்டுள்ளது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தெலுங்கில் ஒருவர் பேசி வெளியிட்ட வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் அவர், “மஸ்ஜித் இன் அருணாச்சலம் டெம்பிள். இது அருணாச்சலம் கோவில். எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை, திடீரென்று மசூதி வந்துள்ளது, கடந்த ஓராண்டில்” என்று குறிப்பிடுகிறார். நிலைத் […]

Continue Reading

கும்பமேளாவுக்கு வந்த 154 வயதான துறவி என்று பரவும் வீடியோ உண்மையா?

பிரயாக்ராஜ் கும்பமேளாவில் பங்கேற்க வந்த 154 வயதான துறவி என்று வயதான துறவி ஒருவரின் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வயதான துறவி ஒருவர் வழிபாட்டில் ஈடுபட்ட வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இமயமலையில் இருந்து கும்ப மேளாவிற்கு வருகை புரிந்த 154 வயது துறவி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். […]

Continue Reading

கும்பமேளாவில் சங்கு ஊதி உலக சாதனை என்று பரவும் தகவல் உண்மையா?

கும்பமேளாவில் 2.49 நிமிடங்கள் தொடர்ந்து சங்கு முழங்கி உலக சாதனை நிகழ்த்தப்பட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஒருவர் சங்கு ஒலி எழுப்பும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உள்ளிட்டவர்கள் அமர்ந்து அதைக் கவனிக்கின்றனர். நிலைத் தகவலில், “Wow!!!!!!! கும்பமேளாவில்…  சங்கு முழங்குவதில் *முதல் உலக சாதனை!* 🎯 தொடக்க […]

Continue Reading

‘தி ராக்’ டுவைன் ஜான்சன் உள்ளிட்டோர் கும்பமேளாவில் பங்கேற்றனரா?

ஹாலிவுட் நடிகரும் WWE பிரபலமுமான தி ராக் டுவைன் ஜான்சன் உள்ளிட்ட மல்யுத்த வீரர்கள் கும்பமேளாவில் பங்கேற்றது போலவும், அவர்களிடம் சனாதனம் குறித்து பேச பெரியாரிய ஆதரவாளர்களுக்குத் தைரியம் உள்ளதா என்று கேட்டு ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive WWE, ஹாலிவுட் பிரபலங்கள் எல்லாம் காவி உடை அணிந்து, கையில் ஜெய் ஶ்ரீராம் கொடியுடன் கும்பமேளாவில் பங்கேற்றது போன்று […]

Continue Reading

கும்பமேளா தீ விபத்து; சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட அயூப் கான் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

கும்பமேளா தீ விபத்து தொடர்பான வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அயூப் கான் என்று ஒரு புகைப்பட பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சாமியார் ஒருவரை இரண்டு போலீஸ்காரர்கள் கைகளில் கயிற்றைக் கட்டி, துப்பாக்கி முனையில் ஆற்றிலிருந்து அழைத்து வருவது போன்று புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்த சாமியார் “அயூப் கான்”. லட்சக்கணக்கான […]

Continue Reading

மோடியின் ராஜதந்திரத்தால் சர்வதேச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்தியர் தேர்வு என்ற தகவல் உண்மையா?

பிரதமர் நரேந்திர மோடியின் ராஜதந்திரம் காரணமாக சர்வதேச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இந்தியாவின் தல்வீர் பண்டாரி தேர்வு செய்யப்பட்டார் என்று தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை வைத்து ஃபேஸ்புக்கில் பதிவு இடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “*பிரேக்கிங் நியூஸ்* சர்வதேச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தேர்தல். இந்தியாவுக்கு மிகப்பெரிய வெற்றி. பிரதமர் மோடியின் சாணக்கிய […]

Continue Reading

ஈவெராவை செருப்பால் அடித்த மே 17 இயக்கத்தினர் மற்றும் பெரியாரிஸ்ட்கள் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘’ஈவெராவை செருப்பால் அடித்த மே 17 இயக்கத்தினர் மற்றும் பெரியாரிஸ்ட்கள்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஈவேரா வை செருப்பால் அடித்த மே 17 இயக்க போராட்ட வாதிகள் மற்றும் பெறியாரிஸ்ட்கள். என்னையா #Thirumurugan_Gandhi குடிபோதையில் நடந்த போராட்டமா ?’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link […]

Continue Reading

கயல்விழி சீமானின் முதல் மகன் யார்?

பெரியார் பற்றி சீமான் பேசியதற்கு பெரியாரிய உணர்வாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சீமானின் வீட்டை முற்றுகையிட முயன்றனர். அப்போது என்ன நடக்கிறது என்று வீட்டு வாசலுக்கு சீமானின் பெரிய மகன் வந்து பார்த்த வீடியோ செய்தி ஊடகங்களில் வெளியானது. இந்த நிலையில், அந்த சிறுவனின் தாயார் கயல்விழி என்றும், கயல்விழியின் முதல் கணவருக்கு பிறந்த மகன் என்றும் சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். Archive சீமானுக்கு 2013ம் ஆண்டு கயல்விழியுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2019ம் […]

Continue Reading

சலூன் கடையை முற்றுகையிட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

‘’சலூன் கடையை முற்றுகையிட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’சலூன் கடை முற்றுகை. பெரியார் குறித்து சர்ச்சையாக பேசிய சீமானை கண்டித்து, சென்னை நீலாங்கரையில் உள்ள சலூன் கடையை முற்றுகையிட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர். சீமான் மன்னிப்புக் கேட்க வலியுறுத்தி முழக்கமிட்டு […]

Continue Reading

மகா கும்பமேளாவில் பங்கேற்ற ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’மகா கும்பமேளாவில் பங்கேற்ற ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’கும்ப மேளாவில் உலக புகழ்பெற்ற APPLE போன் நிறுவனரின் மனைவி 𝗦𝘁𝗲𝘃𝗲 𝗝𝗼𝗯𝘀 💐🚩🕉💫👌’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1  l Claim Link 2   பலரும் இதனை உண்மை […]

Continue Reading

இந்தியாவின் முதல் பெண் போர்ட்டர் என்று பரவும் தகவல் உண்மையா?

கணவன் உயிரிழந்த நிலையில் குடும்பத்தைக் காக்க, கேரள பெண் ரயிலில் சுமை தூக்கும் தொழிலாளியாக மாறினார் என்றும் அவர் தான் இந்தியாவின் முதல் பெண் போர்ட்டர் என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பெண் ஒருவர் ரயில் நிலையத்தில் பயணிகளின் உடைமை சுமைகளை சுமந்து வரும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கணவர் இறந்த பிறகு […]

Continue Reading

கும்பமேளாவில் பங்கேற்ற மற்ற மாநில சினிமா பிரபலங்கள் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

தமிழ்நாட்டுத் திராவிட நடிகர்களைப் போல இல்லாமல் கும்பமேளாவில் பங்கேற்ற மற்ற மாநில திரைப்பட நடிகர்கள் என்று சில புகைப்படங்களைப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தெலுங்கு, இந்தி நடிகர்கள் கும்பமேளாவில் பங்கேற்றது போன்ற ஏஐ புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “உத்தர பிரதேஷ் மாநிலம் பிராயக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் மற்ற மாநிலங்களில் உள்ள சினிமா […]

Continue Reading

‘மாட்டுக்கறி தின்பவன் கீழ் சாதி’ என்று சீமான் கூறினாரா?

மாட்டுக்கறி தின்பவன் கீழ் சாதி என்று சீமான் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு வடிவிலான வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு வடிவிலான சீமான் பேட்டி வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “மாட்டுக்கறி தின்பவன் கீழ் சாதி! கோமியம் விவகாரம் தொடர்பாக நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பதில்” என்று இருந்தது. […]

Continue Reading

ரமண மகரிஷியுடன் காஞ்சி மஹா பெரியவர் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

காஞ்சி மகா பெரியவா எனப்படும் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் திருவண்ணாமலை ரமண மகரிஷியை சந்தித்தபோது எடுத்த படம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இரண்டு துறவிகள் சந்தித்துக்கொண்ட புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “மிக அரிதான புகைப்படம். காஞ்சி மகா பெரியவா திருவண்ணாமலை ரமண மகரிஷி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தை பலரும் சமூக ஊடகங்களில் […]

Continue Reading

பிரபாகரன் படம் விவகாரம்: பல்டியடித்தாரா சங்ககிரி ராஜ்குமார்?

பிரபாகரன் – சீமான் புகைப்பட விவகாரம் தொடர்பாக சங்ககிரி ராஜ்குமார் பல்டியடித்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரபாகரனுடன் சீமான் இருக்கும் புகைப்படம் தொடர்பாக இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் அளித்த 19 விநாடி பேட்டி ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “அந்தப் புகைப்படம் உண்மைதான் ஒரே நாளில் பல்டியடித்த இயக்குநர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “இந்தப் […]

Continue Reading