
‘’ஹரியானா முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார் அரசு வீட்டை காலி செய்த புகைப்படம்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் பதவியை ராஜினாமா செய்த பிறகு தனது உடமைகளுடன் அரசு வீட்டை காலி செய்த பொழுது எடுத்த படம். ஆர்எஸ்எஸ் வளர்ப்பு..’’ என்று எழுதப்பட்டுள்ளது.
இதனை பலரும் உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட செய்தி உண்மையா என்று தகவல் தேடியபோது இதற்கும், மனோகர் லால் கட்டார்க்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரியவந்தது.
மனோகர் லால் கட்டார் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றாலும், இந்தளவுக்கு தனி நபராக மூட்டை முடிச்சுகளுடன் அரசு வீட்டை காலி செய்ததாக, எதுவும் செய்தி ஊடகங்களில் வெளியாகவில்லை.
மேலும், இந்த புகைப்படத்தில் உள்ள நபருக்கும், கட்டாருக்கும் உருவ வேறுபாடு நிறைய உள்ளதைக் காணலாம்.

இதுதவிர, குறிப்பிட்ட புகைப்படம் கடந்த 2019ம் ஆண்டு முதலாகவே சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் ஒன்றாகும். அப்போதும் கட்டாரை கேலி செய்தே பகிரப்பட்டுள்ளது.

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படம் பற்றிய தகவல் தவறானது என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:ஹரியானா முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார் அரசு வீட்டை காலி செய்த புகைப்படமா இது?
Written By: Fact Crescendo TeamResult: False
