துணை முதல்வர் பதவி கேட்டு சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தீர்மானம் நிறைவேற்றியதா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social

‘’துணை முதல்வர் பதவி கேட்டு சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் தீர்மானம்,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் செய்தி ஒன்றை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்: 

Facebook Claim LinkArchived Link

செப்டம்பர் 11, 2020 அன்று இந்த செய்தியை நியூஸ் 7 தமிழ் ஊடகம் பகிர்ந்துள்ளது. இதில், ‘’தமிழகத்தில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரசுக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் தீர்மானம்,’’ என்று எழுதியுள்ளனர்.

இதனைப் பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
இந்த செய்தி கடந்த வாரம் முதலாக, பகிரப்பட்டு வரும் சூழலில், இது தவறான தகவல் என்று கூறி அப்போதே சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக, அதன் தலைவர் க.வீரபாண்டியன், விளக்கம் அளித்திருந்தார்.

அவரது ட்விட்டர் பதிவை கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம். 

Chennai West Congress Committee TweetArchived Link 

இந்த செய்தியை புதிய தலைமுறை உள்ளிட்ட சில ஊடகங்கள் அப்போதே வெளியிட்டுள்ளன. 

Puthiyathalaimurai News LinkArchived Link

எனவே, இந்த விவகாரம் பற்றி அப்போதே சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. இதனை மற்ற ஊடகங்களும் செய்தியாக வெளியிட்ட நிலையில், சம்பந்தப்பட்ட நியூஸ் 7 தரப்பு செய்தியில் திருத்தம் செய்யவில்லை என்பதால், பலரும் இதனை உண்மை என நம்பி, இன்றளவும் குழப்பமடைந்து வருகின்றனர்.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட செய்தி, தவறானது என்று நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், +91 9049044263 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தகவல் தெரிவியுங்கள்.

Avatar

Title:துணை முதல்வர் பதவி கேட்டு சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தீர்மானம் நிறைவேற்றியதா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False