‘’ஸ்ரீரங்கம் கோயிலில் கலவரம் செய்த ஆந்திர பாஜகவினர்,’’ என்று கூறி, புதிய தலைமுறை லோகோவுடன் சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

புதிய தலைமுறை லோகோவுடன் உள்ள இதில், ‘’கோயிலில் கலவரம் செய்த பாஜகவினர்? திருச்சி, ஸ்ரீரங்கம் கோயிலில் திருக்கோயில் பணியாளரை தாக்கியதுடன், உண்டியலையும் சேதப்படுத்த முயன்ற ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், அம்மாநில பாஜகவினர் என முதற்கட்ட தகவல்.

அறநிலையத்துறைக்கு அவப்பெயர் ஏற்படுத்தவே, தூண்டுதலின் பேரில் திட்டமிட்ட வன்முறையில் ஈடுபட்டதாகவும் ஒப்புதல் வாக்குமூலம்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலுக்கு வந்த ஆந்திர மாநில ஐயப்ப பக்தர்களுக்கும், கோயில் ஊழியர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், இரு தரப்பினரும் மாறி மாறி போலீசில் புகார் அளித்தனர். முதல்கட்டமாக, ஆந்திர பக்தர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிந்த போலீசார், கோயில் நிர்வாகத்தைச் சேர்ந்த 3 பேரை கைது செய்துள்ளனர்.

Hindu Tamil Link l Dailythanthi Link

இந்நிலையில், அரங்கநாதர் கோயிலில் ஆந்திர பாஜக.,வினர் வேண்டுமென்றே கலவரம் செய்து, இந்து சமய அறநிலையத்துறைக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயற்சித்ததாகக் கூறி, சில சமூக வலைதளங்களில் தகவல் பரப்புகின்றனர்.

அதன் ஒருபகுதியாகவே, புதிய தலைமுறை லோகோவுடன் கூடிய மேற்கண்ட செய்தியை ஷேர் செய்து வருகின்றனர்.

ஆனால், இது ஒரு போலியான நியூஸ் கார்டு. புதிய தலைமுறை வெளியிட்ட உண்மையான நியூஸ் கார்டு கீழே தரப்பட்டுள்ளது.

உண்மையான செய்தியையும், போலியான செய்தியையும் ஒப்பீடு செய்து கீழே இணைத்துள்ளோம்.

எனவே, புதிய தலைமுறை பெயரில் சிலர் வேண்டுமென்றே போலியான செய்தியை உருவாக்கி, வதந்தி பரப்புகின்றனர் என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:‘ஸ்ரீரங்கம் கோயிலில் கலவரம் செய்த ஆந்திர பாஜக’ என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதா?

Written By: Fact Crescendo Team

Result: Altered