ஏற்றிவிட்ட ஏணி சமுத்திரக்கனியை எட்டி உதைத்த சூர்யா என்று பரவும் தகவல் உண்மையா?

சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu தவறாக வழிநடத்துபவை I Misleading

‘’ஏற்றிவிட்ட ஏணி சமுத்திரகனியை எட்டி உதைத்த சித்திரக்குள்ளன் சூர்யா’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ இந்த கூத்தாடி சூர்யா பய வாங்குற அடிய பாத்து இனி எவனும் திமுக சொம்பு Stand எடுக்கவே பயப்படணும் .

ஏற்றிவிட்ட ஏணி சமுத்திரகனியை எட்டி உதைத்த சித்திரக்குள்ளன் சூர்யா குடும்பத்திற்கு தகுந்த பாடம் புகட்ட புறக்கணிப்போம் ரெட்ரோ படத்தை!!

சினிமாவில நிறைய பேர் வயிற்றெரிச்சலை வாங்கி கட்டிக்கொண்ட செல் தட்டி சிவகுமார் குடும்பம்!! 

#BoycottRetro

#retrodisaster,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

இதனுடன் சமுத்திரக்கனி பேசுவது போன்ற வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. 

Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3 

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். மீண்டும் ஒருமுறை குறிப்பிட்ட வீடியோவை முழுமையாகப் பார்த்தோம். 

அதில், ‘’அப்ப நீ சினிமாவையும் கொன்னுட்டு, எல்லாத்தையும் காலி பண்ணிட்டு, வேற எங்கயோ போற. ஹா ஹா ஹா… (தொகுப்பாளினி இடையே குறுக்கிட்டு, நீங்களே இவ்வளவு எமோஷனல் ஆகுறீங்க என்று கேட்கிறார்) ஆமா. ரொம்ப வேதனையா இருந்துச்சு. ஏன்னா, நாங்க ரெண்டு பேரும் இதுவரைக்கும் என்னென்ன பேசிருக்கோம், எப்படி பழகிருக்கோம், நான் என்ன பண்ணிருக்கன், அவரு என்னவெல்லாம் பண்ணிருக்காரு. இதெல்லாம் நான் பக்கத்துல இருந்து பாத்தவன். (தொகுப்பாளினி மீண்டும் குறுக்கிட்டு, அதென்ன சார் வன்மமா, என்று கேட்கிறார்) அதென்ன என்றே தெரியவில்லை. அது எனக்கு ஒன்றுமே புரியவில்லை. என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அந்த மனிதன் வாழ்ந்த அறம் இருக்குல்ல. அவர் ஒரு அறத்தோடு வாழ்ந்தார் இல்ல, அவர் வந்து சமூகத்திற்கு என்னல்லாம் செஞ்சிருக்கார், எத்தன பேர படிக்க வச்சிருக்கார், அதெல்லாம் என்னாகுறது என்ற கேள்வி வருது இல்லையா, அவர நினைச்சுத்தான் நான் ரொம்ப வருத்தப்பட்டேன். வேதனைப்பட்டேன். வருவாரு பீனிக்ஸ் மாதிரி எழுந்திரிச்சி வருவாரு,’’ என்று சமுத்திரக்கனி பேசியுள்ளார். 

இதன்படி, சமுத்திரக்கனி பேசுவதில், முதல் சில நொடிகள் மட்டும் கேட்டால், சூர்யா தன்னை ஏமாற்றியதுபோல, அவர் குறிப்பிடுவதாக, நினைக்கத் தோன்றுகிறது. ஆனால், முழு வீடியோவையும் கேட்டால், சமுத்திரக்கனி, சூர்யாவை விமர்சிப்பவர்களை பற்றியே ஆதங்கம் தெரிவிப்பதாக, உணர முடிகிறது. இதன்மூலமாக, சமுத்திரக்கனி எங்கேயும் சூர்யா தன்னை ஏமாற்றிவிட்டதாகக் கூறவில்லை என்பது நமக்கு தெளிவாகிறது. 

முழு வீடியோ லிங்க் கீழே இணைக்கப்பட்டுள்ளது. 

கூடுதல் ஆதாரத்திற்காக, நாம் சமுத்திரக்கனி தரப்பிலும் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம். 

எனவே, அரசியல் உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே, சமுத்திரக்கனி SS Music ஊடகத்திற்கு அளித்த பேட்டியை முழுமையாகக் கேட்காமல், ஒரு பகுதியை மட்டும் எடிட் செய்து, சமூக வலைதளங்களில் பரப்புகிறார்கள், என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Avatar

Title:ஏற்றிவிட்ட ஏணி சமுத்திரக்கனியை எட்டி உதைத்த சூர்யா என்று பரவும் தகவல் உண்மையா?

Fact Check By: Pankaj Iyer 

Result: Misleading

Leave a Reply