‘’சென்னை மழை வெள்ளத்தில் நடமாடும் முதலை,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னையில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தில் வலம் வரும் முதலை",’’ என்று எழுதப்பட்டுள்ளது.

Claim Link l Archived Link

பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக, சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள் வெள்ளக்காடாக மாறுவது வழக்கம். 2023ம் ஆண்டு முடிவடையும் நிலையில் சென்னையை மிக்ஜாம் என்ற புயல் கடந்து சென்றுள்ளது. இதனால், சென்னை மாநகரம் மட்டுமின்றி புறநகர்ப்பகுதிகள் முழுக்க வெள்ளக்காடாக மாறியுள்ளன.

இதையொட்டி சென்னையை கேலி கிண்டல் செய்து சமூக வலைதளங்களில் பல்வேறு பதிவுகள் பகிரப்படுகின்றன.

இதில் ஒன்றுதான் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவலும்…

உண்மையில், இந்த முதலை வீடியோ சென்னையில் எடுக்கப்பட்டதல்ல; இதுபற்றி தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் (வன மற்றும் சுற்றுச்சூழல் துறை) மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், இந்த பதிவை உடனடியாக அகற்றும்படியும் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

Supriya Sahu IAS Tweet

மேலும், இந்த வீடியோ மத்தியப் பிரதேச மாநிலத்தில் 2022ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்று ஏற்கனவே நமது Fact Crescendo ஆங்கில பிரிவு நிரூபித்துள்ளது.

Fact Crescendo English Link

எனவே, சென்னைக்கு தொடர்பில்லாத ஒரு வீடியோவை எடுத்து, தவறான தகவல் பரப்பியுள்ளனர் என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:‘சென்னை மழை வெள்ளத்தில் நடமாடும் முதலை’ என்று பகிரப்படும் தவறான வீடியோ!

Written By: Fact Crescendo Team

Result: False