
‘’சிலைகளுக்கு ஏசி ரூம்; இந்தியாவில் பிராமணர்கள் அட்டூழியம்’’, என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ இந்திய அரசு மனநல மருத்துவமனைகளை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும், இல்லையெனில் வாயில் இருந்து பிறக்கும் 3% வாழும் உயிரினங்கள் சமூகத்திற்கு ஆபத்தானது. மக்கள் சரியான நேரத்தில் சிகிச்சை பெறாதபோது, அவர்கள் இப்படி நடந்துகொள்கிறார்கள் 👇’’ என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது 2019ம் ஆண்டு முதலே இணையதளத்தில் பகிரப்படும் புகைப்படம் என்று தெரியவந்தது. அத்துடன் இது ரஷ்யாவில் Hare Rama Hare Krishna என்ற பக்தி இயக்கம் சார்ந்து Darshan of Sri Pancha Tattva எனும் பெயரில் நடத்தப்படும் மத நிகழ்ச்சி.
ஏற்கனவே கொரோனா வைரஸ் பரவிய 2019ம் ஆண்டில் இந்த புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. அப்போதே நாம் இதுதொடர்பாக ஃபேக்ட்செக் செய்திருந்தோம்.
எனவே, ரஷ்யாவில் 2019ம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தை, தற்போது பகிர்ந்து, பிராமணர்கள் மீது வெறுப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் வேண்டுமென்றே வதந்தி பரப்புகிறார்கள் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:Rapid Factcheck: சிலைகளுக்கு ஏசி ரூம்; இந்தியாவில் பிராமணர்கள் அட்டூழியம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Fact Check By: Pankaj IyerResult: MISLEADING
