
‘’இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் செனட்டர் குழுவால் தாக்கப்பட்ட பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ 🇮🇱Israel Prime Minister Netanyahu was attacked and beaten up in Israel parliament by MPs… 自做孽不可活👍👍👍🙏
*சர்வதேச நீதிமன்றத்தால் உலகளவில் தேடப்படும் இஸ்ரேலிய பிரதமர் கொலைகாரன் நெதன்யாகு, அப்பாவி பாலஸ்தீன மக்களை பெண்களை சிறுவர் சிறுமிகளை குழந்தைகளை கொன்று குவித்த கொலைகாரன் உலக கொலைகார தீவிரவாதி நெதன்யாகு நேற்று இஸ்ரேலிய தேசிய மாநாட்டில் இஸ்ரேலிய செனட்டர்கள் குழுவால் தாக்கப்பட்டான், செருப்படி வாங்கினான், விரைவில் இவனுக்கு பொதுமக்கள் முன்னிலையில் கல்லால் அடித்து இவனை கொலை செய்ய வேண்டும்.*
*IBI NEWS*’’ என்று கேப்ஷன் எழுதப்பட்டுள்ளது.
இதனுடன் வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.
Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3
தமிழ், ஆங்கிலம் உள்பட பல்வேறு மொழிகளிலும், பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா, என்று நாம் ஆய்வு செய்தோம். அப்போது, கடந்த 2013ம் ஆண்டு ‘Raw: Leader Threatened With Gun During Speech’ என்ற தலைப்பில் Associated Press வெளியிட்ட ஒரு வீடியோ காணக் கிடைத்தது.
இதில் ‘’Bulgarian police detained a man after he pointed a gas pistol at a Turkish minority party leader as he was delivering a speech at a party caucus in the capital Sofia on Saturday. No shots were fired’’ என்று விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது.
முழு வீடியோ லிங்க் இதோ…
இதன்படி, கடந்த 2013ம் ஆண்டு பல்கேரியா நாட்டில் அரசியல் கட்சி ஒன்றின் மாநாடு நடைபெற்றது. அதில் Ahmed Dogan என்பவர் பேசும்போது, திடீரென மேடைக்கு ஓடிவந்த Oktay Enimehmedov என்ற நபர் துப்பாக்கியால் மிரட்டி, கடுமையாக தாக்கினார். இதுதொடர்பாக பல்வேறு ஊடகங்களிலும் அப்போதே செய்தி வெளியாகியுள்ளது.
இது மட்டுமின்றி, நமது Fact Crescendo Sri Lanka பிரிவு சார்பாக, ஏற்கனவே விரிவான ஃபேக்ட்செக் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அதனையும் கீழே இணைத்துள்ளோம்.
எனவே, 2013ம் ஆண்டு பல்கேரியா நாட்டில் நிகழ்ந்த சம்பவம் ஒன்றின் வீடியோவை எடுத்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீது தாக்குதல் என்று குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புகிறார்கள், என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram
