செந்தில்பாலாஜி மருத்துவமனையில் அனுமதி என்று பழைய செய்தியை புதிது போல பரப்பும் விஷமிகள்!

அரசியல் சார்ந்தவை | Political தமிழ்நாடு | Tamilnadu

சமீபத்தில் அமைச்சர் பதவியிலிருந்து விலகிய செந்தில்பாலாஜி நெஞ்சுவலி என்று கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

பாலிமர் டிவி வெளியிட்ட நியூஸ் கார்டை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில், “ஐசியு பிரிவில் செந்தில் பாலாஜி அனுமதி. ஓமந்தூரார் அரசு மருத்துவமனை ஐசியு பிரிவில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதி. செந்தில் பாலாஜிக்கு மூச்சு விடுவதில் சற்று பிரச்னை இருப்பதால் மருத்துவர்கள் பரிசோதனை; இசிஜி உள்ளிட்ட பரிசோதனைகளை மருத்துவர்கள் மேற்கொண்டதாக தகவல்” என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

அமைச்சர் பதவியிலிருந்து சமீபத்தில் செந்தில் பாலாஜி ராஜிமானமா செய்தார். இந்த நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பலரும் சமூக ஊடகங்களில் நியூஸ் கார்டை பகிர்ந்து விரைவில் கைது செய்யப்படுவதிலிருந்து தப்பிக்க நாடகம் நடத்துகிறார் என்பது போன்று கருத்தைப் பகிர்ந்து வருகின்றனர்.

ஆனால், செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக எந்த செய்தியும் இல்லை. மேலும், அந்த நியூஸ் கார்டிலேயே தெளிவாக 2024ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி வெளியிடப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதை கவனிக்காமல், கவனித்தாலும் அவதூறு பரப்பியே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த நியூஸ் கார்டை ஏராளமானவர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருவதைக் காண முடிகிறது.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

இந்த நியூஸ் கார்டு பழையது என்பதை உறுதி செய்ய, 2024ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி பாலிமர் டிவி வெளியிட்ட நியூஸ் கார்டை தேடி எடுத்தோம். அப்போது ஊடகங்களில் வெளியான செய்திகளையும் எடுத்தோம். இவை எல்லாம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டில் உள்ள தகவல் 2024ம் ஆண்டு நடந்தது என்பதை உறுதி செய்கின்றன.

2024ம் ஆண்டில் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியை புதிய செய்தி போல் பரப்பி, வழக்கில் இருந்து தப்பிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது போன்று தவறான தகவலை சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருவதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்துள்ளோம். இந்த தகவல் தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்பது தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

2024ம் ஆண்டு செந்தில்பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியை 2025ல் புதிய செய்தி போல சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருவதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:செந்தில்பாலாஜி மருத்துவமனையில் அனுமதி என்று பழைய செய்தியை புதிது போல பரப்பும் விஷமிகள்!

Fact Check By: Chendur Pandian 

Result: Misleading

Leave a Reply