
‘‘இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க துப்பாக்கி பாதுகாப்புடன் கோயிலுக்குச் சென்றார்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ இலங்கை அதிபர் என்று நினைக்கிறேன்… திராவிடியாக்களுக்கு இந்த போட்டோவை பார்த்தால் பிடிக்காது.’’ என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். நமது Fact Crescendo Srilanka குழு உதவியுடன், இலங்கை அதிபர் அலுவலகத்தை தொடர்புகொண்டு விளக்கம் கேட்டோம்.
அப்போது, ‘’ கடந்த 2026 ஜனவரி 16 அன்று யாழ்ப்பாணம் நயினாதீவு நாகபூஷணி அம்மன் தேவஸ்தானத்திற்கு அதிபர் அனுர குமார சென்று வழிபட்டார். ஆனால், அதுதொடர்பான புகைப்படங்களுக்கும், மேற்கண்ட படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது AI முறையில் தயாரிக்கப்பட்டது,’’ என்று தெரிவித்தனர்.

கூடுதல் செய்தி ஆதாரம் இதோ…
Virakesari l Yarl l Kuruvi l Ada Derana Tamil
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படம், AI முறையில் எடிட் செய்யப்பட்டது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram
Title:இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க துப்பாக்கி பாதுகாப்புடன் கோயிலுக்குச் சென்றாரா?
Fact Check By: Pankaj IyerResult: Altered


