
‘’திராவிட மாடல் அரசே… அரசுப் பள்ளிகளில் இந்தியை கற்றுக் கொடு’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
அரசுப் பள்ளி சீருடை அணிந்த மாணவி ஒருவர் தனது கையில் சிலேட் பிடித்திருப்பது போன்ற புகைப்படம் உள்ளது. அதில், ‘’திராவிடமாடல் அரசே… அரசு பள்ளிகளில் இந்தியை கற்று கொடு! அல்லது இந்தியை கற்று கொடுக்கும் தனியார் கல்வி நிலையங்களை இழுத்து மூடு!! பாமரனுக்கு கிடைக்காத கல்வி யாருக்கும் வேண்டாம்!!’’ என்று எழுதப்பட்டுள்ளது.
Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது ஒரு எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என்று தெரியவந்தது. ஆம், ஆன்லைனில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள Stock படம் ஒன்றை எடுத்து, இவ்வாறு எடிட் செய்து, தகவல் பகிரப்படுகிறது.
Shutterstock l istockphoto l stock.adobe
உண்மையான புகைப்படத்தையும், எடிட் செய்த புகைப்படத்தையும் ஒப்பீடு செய்து, கீழே இணைத்துள்ளோம்.
இவற்றின் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படம் எடிட் செய்யப்பட்டது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:திராவிட மாடல் அரசே… அரசுப் பள்ளிகளில் இந்தியை கற்றுக் கொடு என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Written By: Pankaj IyerResult: Altered
