
‘’ஒளிப்பதிவு திருத்தச் சட்டத்தை ஆதரித்துப் பேசிய தங்கர் பச்சான்,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை கண்டோம். அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

ஒளிப்பதிவு திருத்த சட்டத்தை ஆதரித்து, இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் தங்கர் பச்சான் பேசியதாக மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளனர். இதனைப் பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்தியாவில், தற்போது சினிமா உள்ளிட்ட காட்சி ரீதியான படைப்புகளை கண்காணிக்கும் வகையில், புதிய ஒளிப்பதிவு திருத்த சட்டம் ஒன்றை மத்திய அரசு அமல்படுத்தும் பணிகளை மேற்கொண்டுள்ளது. இதற்கு எதிராக பலரும் ஆதரவும், எதிர்ப்பும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த சூழலில், இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் தங்கர் பச்சான், சமீபத்தில் சன் டிவி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று இந்த திருத்த சட்டத்திற்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார். ஆனால், அவரது கருத்தை அப்படியே தலைகீழாக மாற்றி, அவர் ஆதரித்துப் பேசியதாகக் கூறி, பலரும் மேற்கண்ட கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், இந்த விசயம் பற்றி தங்கர் பச்சான் ஏற்கனவே, போலீசில் புகார் அளித்துள்ளார்.
Dinamani News Link I News 18 Tamil Link
மேலும், அவர் பற்றி சன் நியூஸ் வெளியிட்ட உண்மையான நியூஸ் கார்டையும் கீழே இணைத்துள்ளோம்.
எனவே, இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், ‘’தங்கர் பச்சான் புதிய ஒளிப்பதிவு சட்டத் திருத்தத்தை ஆதரித்துப் பேசவில்லை; எதிர்த்தே பேசியுள்ளார். அவர் கூறியதை சிலர் தவறாக சித்தரித்து வதந்தி பரப்பி வருகின்றனர். இதுபற்றி அவர் போலீசில் புகாரும் அளித்துள்ளார்,’’ என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel

Title:ஒளிப்பதிவு திருத்தச் சட்டத்தை ஆதரித்து தங்கர் பச்சான் பேசினாரா?
Fact Check By: Pankaj IyerResult: False
