‘’பாஜக.,வை சேர்ந்த அமர் பிரசாத் ரெட்டி காமசூத்ரா புத்தகம் படித்தார்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வசிக்கும் மக்கள் பெரும் பாதிப்பிற்கு ஆளாகினர். இதனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணம் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே தென் மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்துள்ளதால், மக்கள் அவதியடைந்துள்ளனர். இதனால், சமூக வலைதளங்களில் பாஜக, திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சி ஆதரவாளர்கள் இடையே கருத்து மோதல் வெடித்துள்ளது.

இந்த சூழலில்தான், பொறுப்பில்லாமல் அமர் பிரசாத் காமசூத்ரா படிப்பது போன்று மேற்கண்ட வகையில் தகவல் பகிரப்படுகிறது. ஆனால், இது எடிட் செய்யப்பட்ட படமாகும்.

உண்மையான படத்தையும், எடிட் செய்த படத்தையும் ஒப்பீடு செய்து கீழே இணைத்துள்ளோம்.

எனவே, எடிட் செய்த புகைப்படத்தை எடுத்து, அமர் பிரசாத் ரெட்டி பெயரில் சிலர் வேண்டுமென்றே வதந்தி பரப்புகின்றனர் என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:காமசூத்ரா புத்தகம் படித்தாரா அமர் பிரசாத் ரெட்டி?

Written By: Fact Crescendo Team

Result: Altered