வக்ஃப் மசோதா நிறைவேறியதால் அசாதுதீன் ஒவைசி கண்ணீர் விட்டு அழுதாரா?

அரசியல் சார்ந்தவை | Political இந்தியா | India

‘’வக்ஃப் மசோதா நிறைவேறியதால் அசாதுதீன் ஒவைசி கண்ணீர் விட்டு அழுதார்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ நேற்றைய மிகவும் திருப்திகரமான காணொளி. 

இந்த ரஸாக்கர் ₹3000 கோடி மதிப்புள்ள வக்ஃப் சொத்துக்களில் மீது அமர்ந்திருக்கிறார். 

இப்போது அனைத்தையும் திரும்பப் பெறப்படும். அவரால் உரிமை கோரக்கூட முடியாது. 🤣🤣🤣

குட் ஷாட்!!!,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
இதனுடன் அசாதுதீன் ஓவைசி கண்கலங்க நாடாளுமன்ற அவையில் அமர்ந்துள்ளதை போன்ற வீடியோவை இணைத்துள்ளனர். 

Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3 

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். முதலில், இந்த வீடியோவின் ஒரு ஃபிரேமை பிரித்தெடுத்து, அதனை ரிவர்ஸ் இமேஜ் முறையில் கூகுள் உதவியுடன் தகவல் தேடினோம். அப்போது, இந்த வீடியோ கடந்த 2024ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒன்று, என தெரியவந்தது.  

இதன்படி, கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதியன்று நாடாளுமன்றத்தின் மக்களவையில், நிதி மசோதா ஒன்றின் மீது நடைபெற்ற விவாதத்தின் போது, பப்பு யாதவ் என்பவர் பேசுகையில், அவருக்குப் பின் அமர்ந்திருந்த ஒவைசி கண் கண்ணாடியை கழற்றிவிட்டு, நெற்றி மற்றும் கண்களை துடைத்துக்கொண்டு, ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார். 

முழு வீடியோ லிங்க் இதோ…

அதேசமயம், வக்ஃப் திருத்த மசோதா மீதான விவாதம் சமீபத்தில் நடைபெற்ற ஒன்றாகும். இதன்போது, ஒவைசி ஆக்ரோஷமாக விவாதத்தில் பங்கேற்றதை நாம் தெளிவாகக் காணலாம். மேலும், இவ்விரு விவாதங்களிலும் ஒவைசி அணிந்துள்ள ஆடை வெவ்வேறாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

கூடுதல் செய்தி ஆதாரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. 

Hindustan Times l Times Now l The Indian Express 

எனவே, 2024ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வீடியோ ஒன்றின் காட்சிகளை எடுத்து, வக்ஃப் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிகழ்வுடன் தொடர்புபடுத்தி, வதந்தி பரப்புகிறார்கள், என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.  

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Avatar

Title:வக்ஃப் மசோதா நிறைவேறியதால் அசாதுதீன் ஒவைசி கண்ணீர் விட்டு அழுதாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False