பாஜக தேசிய செய்தித் தொடர்பாளராக பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டாரா? 

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

‘’பாஜக தேசிய செய்தித் தொடர்பாளராக பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளார்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’bjp national president shri jagat prakash nadda has appointed shri prashant kishor as the national chief spokesperson of bjp,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

Archived Link 

பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் தொடர்பாக, நாம் தகவல் தேடினோம். அப்போது, இதுபோன்று எந்த செய்தியும் சமீபத்தில் வெளியாகவில்லை, என்று தெரியவந்தது. 

இறுதியாக, நாம் பிரசாந்த் கிஷோர் அலுவலகத்தை (Jan Suraaj – 9121691216) தொடர்பு கொண்டோம். அவர்கள், ‘’இது தவறான செய்தி. இதுபற்றி நாங்கள் ஏற்கனவே மறுப்பு தெரிவித்துள்ளோம்,’’ என்று கூறி, X தளத்தில் வெளியிட்ட பதிவு ஒன்றின் லிங்க் கொடுத்தனர். அந்த லிங்க் கீழே இணைக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து பாஜக தரப்பில் விசாரித்தபோது, ‘நாகாலாந்து பாஜக தலைவராக Benjamin Yepthomi நியமிக்கப்பட்டபோது நாங்கள் வெளியிட்ட அறிக்கையை எடுத்து, இவ்வாறு எடிட் செய்து வதந்தி பரப்புகிறார்கள்,’ என்றனர். 

உண்மையான அறிக்கையையும், போலியான அறிக்கையையும் ஒப்பீடு செய்து, கீழே இணைத்துள்ளோம். 

எனவே, பாஜக தேசிய செய்தித் தொடர்பாளராக பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டதாக, பரவும் தகவல் தவறானது என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram 

Avatar

Title:பாஜக தேசிய செய்தித் தொடர்பாளராக பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டாரா?

Fact Check By: Fact Crescendo Team 

Result: ALTERED