எம்.எஸ்.தோனியின் அதிரடி பேட்டிங் பார்த்து பிரையன் லாரா பயந்தாரா?

Sports சமூக ஊடகம் | Social

‘’எம்.எஸ்.தோனியின் அதிரடி பேட்டிங் பார்த்து பிரையன் லாரா பயந்தார்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ ஆட்டக்காரண்ணா யாரு தெரியுமா நம்ம சீனியர் ah இருந்துட்டு ஜூனியர் ah ஃபிசிக்கலா மிரட்டுறவன் இல்ல… நம்ம ஜூனியர் ah இருக்கும்போது நம்ம ஆட்டத்தால சூப்பர் சீனியரை மிரட்டுறது… போதும்பா உன் ஆட்டத்தை நிறுத்து எங்க பவுலர் எல்லாம் மனசு உடைஞ்சு போய் வீக்கா நிக்குறாங்கன்னு லாரா கெஞ்சிய தருணம்…🔥🔥🔥🔥’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன், தோனி பேட்டிங் செய்வது, பிரையன் லாரா வாக்குவாதம் செய்வது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. 

Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட செய்தி உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். இதன்படி, தோனியின் அதிரடி பேட்டிங்கை பார்த்து, பிரையன் லாரா பயந்து போய், போதும்பா உன் ஆட்டத்தை நிறுத்து என்று கெஞ்சவில்லை. மாறாக, தோனி அடித்த பந்து ஒன்றை மேற்கிந்திய அணியின் வீரர் ஒருவர் கேட்ச் பிடித்தது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் இது என்று நமக்கு தெரியவந்தது. 

Espn Cric Info l Telegraph India l India Times

கடந்த 2006ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி, மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றது. அங்கு நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் (ஜூன் 2 முதல் ஜூன் 6 வரை) இரு அணிகளுக்கும் வெற்றி, தோல்வி இன்றி ஆட்டம் டிரா செய்யப்பட்டது. 

இந்த போட்டியின்போது, 2வது இன்னிங்ஸ் விளையாடிய இந்திய அணிக்கு ஒரு சிக்கல் ஏற்பட்டது. அதாவது, அதிக ஸ்கோர் குவித்துவிட்டதாலும், மறுபுறம் ஒருநாள் ஆட்டம் மட்டுமே எஞ்சியுள்ளதாலும், இந்திய அணி 2வது இன்னிங்ஸ் ஆட்டத்தை டிக்ளேர் செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டது. அப்போதைய கேப்டன் ராகுல் டிராவிட் இந்த டிக்ளேர் முடிவை அறிவிக்க முன்வந்தார். அதே சமயம், களத்தில் முகமது கைஃப் மற்றும் மகேந்திர சிங் தோனி இருவரும் வலுவான பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். இதனால், ஆட்டம் டிக்ளேர் செய்யப்படுமா, இல்லையா என்ற கேள்வி எழுந்தது. அன்றைய நாள் மாலை 5 மணிக்கு முன்பாக, தோனி அடித்த ஒரு பந்து, பெவிலியன் அருகே கேட்ச் பிடிக்கப்பட்டது. அது கேட்சா அல்லது சிக்ஸா என்று கேட்டு, தோனி தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. ஆனால், மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் லாரா, அது அவுட்தான் என்று பதில் கூறவே, இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ காட்சிகளை தற்போது எடிட் செய்து, தோனியின் ஆட்டத்தை பார்த்து, லாரா பயந்துவிட்டதாகக் கூறி, பலரும் புது வதந்தி பரப்பி வருகின்றனர். 

இந்த போட்டியின் முழு விவரம் இதோ… espncricinfo

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல் உண்மையானதல்ல, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Avatar

Title: எம்.எஸ்.தோனியின் அதிரடி பேட்டிங் பார்த்து பிரையன் லாரா பயந்தாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: MISLEADING