
‘’பணம் கொடுத்து கூட்டம் சேர்க்கும் எடப்பாடி பழனிசாமி,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ #பட்டுவாடாபஸ்
காசுக்கு அழைத்து வரப்படும் கூட்டம்
எடப்பாடி புலம்புவதை
கரை வேட்டி கட்டிய கட்சிக்காரர்களோடு கலந்து நின்று “கேட்பது போல நடித்து விட்டு” கலைந்து போகிறது.
“பச்சை” ஆம்னி பஸ்ஸை தவிர பார்ப்பதற்கும் கேட்பதற்கும் சுவாரஸ்யம் ஏதுமில்லாத இந்த பழனிச்சாமியின்
“பண விநியோக” பயணத்தால்
பலன் ஏதும் இருக்கப் போவதில்லை..
மருது..,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட காட்சி, என்று தெரியவந்தது.

இதன்படி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு உடுமலை அருகே நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் திமுகவினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு, கட்சி நிர்வாகிகள் பணம் பட்டுவாடா செய்தனர். அதில் ஒரு காட்சியை எடுத்து, அதிமுக இவ்வாறு செய்வதாக, சமூக வலைதளங்களில் ஷேர் செய்கின்றனர்.
கூடுதல் செய்தி ஆதாரம் இதோ…
Dinakaran Link l One India Tamil Link l Hindu Tamil Link
எனவே, திமுக தொடர்பான செய்தியை எடுத்து, அதிமுக பெயரில் சேர்த்து, வதந்தி பரப்புகிறார்கள், என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram
Title:பணம் கொடுத்து கூட்டம் சேர்க்கும் எடப்பாடி பழனிசாமி என்று பரவும் தகவல் உண்மையா?
Fact Check By: Pankaj IyerResult: Misleading


