FACT CHECK: சசிகலா காலில் விழத் தயார் என்று குருமூர்த்தி கூறினாரா?- போலி நியூஸ் கார்டு!

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

தி.மு.க-வை வீழ்த்த சசிகலா காலில் விழத் தயார் என்று குருமூர்த்தி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி புகைப்படத்துடன் புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “திமுகவை வீழ்த்த நான் சசிகலா காலில் விழத் தயார்! – குருமூர்த்தி, துக்ளக் ஆசிரியர்” என்று இருந்தது.

இந்த பதிவை தி மு க இணையதள செய்திகள் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் திராவிடநாடு திராவிடநாடு என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 ஜனவரி 16 அன்று வெளியிட்டுள்ளார். 

இவரைப் போல ஏராளமானவர்கள் இந்த புகைப்படத்தை ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடக பக்கங்களில் ஷேர் செய்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:

துக்ளக் ஆண்டு விழாவில் சசிகலா பற்றி அந்த பத்திரிகையின் ஆசிரியர் குருமூர்த்தி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. கங்கை நீர், சாக்கடை நீர் என்று அவர் ஒப்பிட்டுப் பேசினார். அதன் பிறகு தி.மு.க-வை எதிர்க்க வேண்டுமெனில் சசிகலா போன்றவர்களை அ.தி.மு.க சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று தன்னுடைய கருத்தைத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தி.மு.க-வை வீழ்த்த நான் சசிகலா காலில் விழத் தயார் என்று குருமூர்த்தி கூறியதாக சமூக ஊடகங்களில் புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டு வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

அந்த நியூஸ் கார்டில் ஜனவரி 15, 2021 என்று தேதி உள்ளது. எனவே, 2021 ஜனவரி 15 அன்று புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டுகளை எல்லாம் பார்த்தோம். அப்போது, “தமிழக அரசியல் காமெடி அரசியலாக மாறிவிட்டது. திமுகவும், அதிமுகவும் ஊழல் கட்சிகளே. திமுக குடும்ப ஊழல், அதிமுக கூட்டு ஊழல் – குருமூர்த்தி, துக்ளக் ஆசிரியர்” என்று ஒரு நியூஸ் கார்டு கிடைத்தது. இதை எடிட் செய்து சசிகலா காலில் விழத் தயார் என்று தவறான தகவல் சேர்த்து எடிட் செய்து பகிர்ந்திருப்பது தெரிந்தது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

இது தொடர்பாக புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவு ஹெட் மனோஜை தொடர்புகொண்டு கேட்டோம். அவரும் இது போலியான நியூஸ் கார்டு, தாங்கள் வெளியிட்டதை எடிட் செய்து வெளியிட்டுள்ளார்கள்” என்றார்.

ஒருவேளை அந்த நிகழ்ச்சியில் சசிகலா காலில் விழத் தயார் என்று பேசினாரா, அது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று தேடினோம். அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் சசிகலா பற்றிய தன்னுடைய கருத்து தொடர்பாக குருமூர்த்தி விளக்கம் அளித்தது தொடர்பான செய்திகள் கிடைத்தன.

Archive 1 I bbc.com I Archive 2

இதன் மூலம் சசிகலா காலில் விழத் தயார் என்று குருமூர்த்தி கூறியதாக, பகிரப்படும் நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டது என்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தி.மு.க-வை அழிக்க சசிகலா காலில் விழத் தயார் என குருமூர்த்தி கூறியதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் புதிய தலைமுறை நியூஸ் கார்டு போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:சசிகலா காலில் விழத் தயார் என்று குருமூர்த்தி கூறினாரா?- போலி நியூஸ் கார்டு!

Fact Check By: Chendur Pandian 

Result: Altered