வங்கதேசத்தில் இந்து பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவதாகவும் அவர்களது உள்ளாடையுடன் இளைஞர் ஒருவர் வந்ததாகவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

இளைஞர் ஒருவர் பெண்களின் உள்ளாடைகளைக் கையில் ஏந்தி நிற்கும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "பங்களாதேஷில் உள்ள இந்துப் பெண்களும் உள்நாட்டுக் கலவரம் ஏற்பட்டுள்ள வங்காளதேசத்தில் தொடர்ச்சியாக அடையாளப்படுத்தப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டு கற்பழிக்கப்படுகின்றனர்.

இந்துக் குடும்பங்களும் அவர்களது உடமைகளும் பாகுபாடு இன்றி தீயிட்டு எரிக்கப்படுகின்றன. இந்து பெண்கள் கற்பழிப்புக்காக உயிருடன் வைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதனை உணர வேண்டும் இந்தியாவில் வாழும் இந்துக்கள் அனைவரும் அன்பார்ந்த பாரதத்தின் ஜாதி இந்துக்களே - நீங்கள் இப்போது ஒன்றுபடவில்லை என்றால், அந்த நாள் நமக்கு வர வெகு தொலைவில் இல்லை, ஆனால் *அவர்கள் கையில் ஏந்தி இருக்கும் பெண்களின் உள்ளாடைகள் இன்று வங்கதேசத்தில் உள்ள இந்து பெண்களின் உடையாக இருப்பது நாளை நம் சகோதரிகள், தாய், மகள்கள் அல்லது நம்முடைய மனைவி இவர்களுடையதாக இருக்கும் காலம் வராமல் இருக்க எந்த வித பாகுபாடும் இன்றி ஒன்றுபட வேண்டும் இந்துக்கள்*

இன்று வங்கதேசத்தில் நடப்பது நாளை இந்தியாவிலும் நடக்கும். Gazwa-E-Hind 2047 இன் இஸ்லாமியத் திட்டம் மிக மிக தீவிரமானது நகைச்சுவை அல்ல" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

வங்கதேசத்தில் உள்நாட்டுக் கலவரம் முற்றிய நிலையில் அந்நாட்டுப் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு நாடு தப்பினார். ஷேக் ஹசீனாவின் வீட்டுக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் வீட்டை சூறையாடினர். வீட்டிலிருந்த பொருட்களை எல்லாம் எடுத்துச் சென்றனர். இந்த நிலையில் வங்கதேசத்தில் இந்து பெண்களை மானபங்கம் செய்து, அவர்களது உள்ளாடையை ஒருவர் எடுத்து வந்ததாக பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். எனவே, இந்த தகவல் தொடர்பாக ஆய்வு செய்தோம்.

Archive

இந்த புகைப்படத்தைக் கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த புகைப்படத்தைப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருவதைக் காண முடிந்தது. அதில், ஷேக் ஹசீனாவின் உள்ளாடை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் உள்ளாடையை எடுத்துச் சென்ற வங்கதேச போராட்டக்காரர்கள் என்று சிலர் பதிவிட்டிருந்தனர். உள்ளாடையை ஏந்திய நபரை போராட்டக்காரர்கள் தோளில் தூக்கி வைத்த வீடியோவும் நமக்கு எக்ஸ் தளத்தில் இருந்த கிடைத்தது.

Archive

செய்தி ஊடகங்களில் இந்த புகைப்படம் வெளியாகி இருப்பதும் நம்முடைய ஆய்வில் தெரியவந்தது. டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டிருந்த செய்தியில் வங்கதேச பிரதமர் இல்லத்திலிருந்த பொருட்களை பொது மக்கள் எடுத்துச் சென்றனர். பெண்கள் அணியக் கூடிய உள்ளாடை, ஜாக்கெட் மற்றும் இதர உடைகளை அவர்கள் எடுத்துச் சென்றனர். தங்களுக்குத் தேவைப்படுகிறதா இல்லையா என்ற கவலையின்றி கையில் கிடைத்ததை எல்லாம் எடுத்துச் சென்றனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. வேறு ஊடகங்களிலும் இந்த புகைப்படத்துடன் செய்தி வெளியாகி இருந்ததைக் காண முடிந்தது.

உண்மைப் பதிவைக் காண: timesofindia.indiatimes.com I Archive 1 I punjabkesari.in I Archive 2

வங்கதேச பிரதமர் வீட்டை கைப்பற்றிய போராட்டக்காரர்கள் அவரது உள்ளாடைகளை எடுத்து வந்த புகைப்படத்தை வங்க தேசத்தில் இந்து பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, அவர்களது உள்ளாடையை எடுத்துச் செல்கின்றனர் என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

வங்கதேச பிரதமர் இல்லத்தில் இருந்த பொருட்களை போராட்டக்காரர்கள் எடுத்துச் சென்ற புகைப்படத்தை வங்கதேசத்தில் இந்து பெண்களின் உள்ளாடையை ஏந்தி வந்த இளைஞர் என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:வங்கதேசத்தில் இந்து பெண்களின் உள்ளாடைகளுடன் வந்த இளைஞர் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Written By: Chendur Pandian

Result: False