‘’நிர்மலா சீதாராமனை வழிமறித்த தூத்துக்குடி மக்கள்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

புதிய தலைமுறை ஊடகத்தின் லோகோவுடன் உள்ள இதில் ‘’தூத்துக்குடியில் பரபரப்பு. தூத்துக்குடியில் வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய சென்ற நிர்மலா சீதாராமனை வழிமறித்த மக்கள். நிவாரண நிதி எங்கே என முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்துள்ளது.

இதனால், தமிழ்நாடு அரசுக்கு, கூடுதல் வெள்ள நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று ஆளுங்கட்சியான திமுக வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பாக, உதயநிதி ஸ்டாலின் மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடையே கடும் வார்த்தைப் போர் ஏற்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தற்போது மழை வெள்ளம் பாதித்த தென் மாவட்டங்களில் நேரில் ஆய்வு செய்ய வந்துள்ளார்.

இதற்கிடையே, நிர்மலா சீதாராமனை தூத்துக்குடி மக்கள் வழிமறித்து நிவாரண நிதி எங்கே என்று கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டதாகக் கூறி மேற்கண்ட வகையில் தகவல் பகிரப்படுகிறது. ஆனால், இவ்வாறு எந்த செய்தியையும் புதிய தலைமுறை ஊடகம் வெளியிடவில்லை.

அவர்கள் வெளியிட்ட உண்மையான செய்தி கீழே இணைக்கப்பட்டுள்ளது.

உண்மையான செய்தியையும், எடிட் செய்யப்பட்ட செய்தியையும் ஒப்பீடு செய்து, கீழே இணைத்துள்ளோம்.

கூடுதல் ஆதாரத்திற்காக, இதுபற்றி நாம் பாஜக ஐடி பிரிவு மற்றும் புதிய தலைமுறை தரப்பில் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம்.

எனவே, நிர்மலா சீதாராமன் பெயரில் சிலர் வேண்டுமென்றே வதந்தி பரப்புகின்றனர் என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:நிர்மலா சீதாராமனை வழிமறித்த தூத்துக்குடி மக்கள் என்று பரவும் செய்தி உண்மையா?

Written By: Fact Crescendo Team

Result: ALTERED