
‘’கோயில் பணத்தை கொள்ளையடித்த கருணாநிதி’’ என்று திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் பேசியதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இந்த பதிவில், ‘’ கோவில் பணத்தை கொள்ளையடித்த கருநாய்நிதி. இதை நான் சொல்லவில்லை, திமுக MP ஜெகத் ரட்சகன் கூறுகிறான்.
மீண்டும் வேண்டாம் திமுக.
சிந்தியுங்கள் மக்களே.’’ என்று எழுதப்பட்டுள்ளது.
இதனை பலரும் உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட வீடியோ பதிவில் பேசும் நபர் உண்மையில் ஜெகத்ரட்சகனா என்று தகவல் தேடினோம். ஆனால், இவருக்கும், ஜெகத்ரட்சகனுக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை. இருவரையும் ஒப்பீடு செய்து, கீழே இணைத்துள்ளோம்.

இதுதவிர, பேசும் நபரின் பின்னணியில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் படம் இடம்பெற்றுள்ளது. இதன்மூலமாக, இது அக்கட்சி தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் எடுக்கப்பட்டதாக, தெரியவருகிறது.

மேலும், கூடுதல் ஆதாரத்திற்காக, திமுக ஐடி பிரிவில் விசாரித்தபோது, ‘’நாம் தமிழர் கட்சி நிகழ்வு ஒன்றை எடுத்து, திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் என்று கூறி வதந்தி பரப்புகிறார்கள்,’’ என்று தெரிவித்தனர்.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோ பற்றிய தகவல் தவறானது என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:‘கோயில் பணத்தை கொள்ளையடித்த கருணாநிதி’ என்று திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் பேசினாரா?
Written By: Fact Crescendo TeamResult: False
