
‘’ஹரியானா மல்யுத்த வீராங்கனை பிரியா மாலிக், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்,’’ எனும் தலைப்பில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இந்த தகவலை வாசகர்கள் சிலர், 9049044263 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணில் அனுப்பி உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தனர். எனவே, இதுபற்றி நாமும் ஆய்வு மேற்கொண்டோம்.
உண்மை அறிவோம்:
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகமே கடந்த 2020ம் ஆண்டில் முடங்கியது. இதையொட்டி, தள்ளி வைக்கப்பட்டிருந்த ஒலிம்பிக் 2020 போட்டிகள், தற்போது ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தொடங்கியுள்ளன.
இதில், இந்தியா இதுவரையிலும் வெள்ளிப் பதக்கம் மட்டுமே பெற்றுள்ளது. மற்றபடி, வேறு பதக்கங்கள் இந்தியாவிற்கு கிடைக்கவில்லை.

இந்த சூழலில்தான், ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டி பிரிவில், பிரியா மாலிக் தங்கப் பதக்கம் வென்றதாகக் கூறி தகவல் பகிரப்படுகிறது. ஆனால், அவர் வென்றது World Cadet Wrestling Championship 2021 போட்டியில் ஆகும்.
இதுபற்றி பல்வேறு ஊடகங்களிலும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த உண்மையை புரிந்துகொள்ளாமல் சிலர், இதனை டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுடன் தொடர்புபடுத்தி தகவல் பரப்பி வருகின்றனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
The Print Link I Hindustan Times Link
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel

Title:பிரியா மாலிக் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றதாக பரவும் வதந்தி…
Fact Check By: Pankaj IyerResult: Partly False
