காஸாவில் அப்பாவி மக்களை இஸ்ரேல் கொன்று குவிப்பதாக வெளிநாட்டு ஊடகங்களுக்குக் காண்பிக்க நடத்தப்பட்ட நாடக இறுதிச் சடங்கு என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:


உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I X Post I Archive 2

இறந்தவரின் உடலை சிலர் சுமந்து செல்வது போல வீடியோ ஃபேஸ் புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவில், உடலை சுமந்து செல்லும் போது சைரன் சத்தம் கேட்கவே அனைவரும் தப்பித்து ஓடுகின்றனர். இறந்தவர் போல படுத்திருந்த நபரும் எழுந்து ஓடுகிறார். பார்க்க நகைச்சுவைக்காக எடுத்தது போல உள்ளது.

நிலைத் தகவலில், "காஸாவில் இறுதிச் சடங்கு நாடகம் இஸ்ரேல் பொதுமக்களைக் கொன்று குவிப்பதாக வெளிநாட்டு ஊடகங்களுக்குக் காட்டவே இந்த இறுதிச் சடங்கு நாடகம் நடத்தப்பட்டது. ஆனால், வான்வழித் தாக்குதல் சைரன் அடித்தபோது, ​ *உடல்* ' உட்பட அனைவரும் தங்களை காப்பாற்றிக்கொள்ள ஓடும் காட்சி இதற்கு தான் முக்கா முட்டா முல்லாக்களுக்கு கூரு இருப்பதில்லை என்று மற்றொரு முல்லாவே. கூறியிருக்கிறான்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.


உண்மை அறிவோம்:

போலி இறுதிச் சடங்கு வீடியோ என்று குறிப்பிட்டு இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் யாருமே உயிரிழக்காதது போலவும், பாலஸ்தீனியர்கள் நாடகம் நடத்துவது போலவும் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோ பாலஸ்தீனத்தில் உலகை ஏமாற்ற நடத்தப்பட்ட நாடக காட்சியா என்று அறிய ஆய்வு செய்தோம்.


உண்மைப் பதிவைக் காண: alroeya.com I Archive

வீடியோ காட்சியை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, 2020ம் ஆண்டில் இருந்து இந்த வீடியோ செய்தி மற்றும் சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. அதில், ஜோர்டான் நாட்டில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை மீறி இளைஞர்கள் விளையாட்டுத்தனமாக நடத்திய மாதிரி இறுதிச் சடங்கு என்று குறிப்பிடப்பட்டிருந்தது.


2020ம் ஆண்டு மார்ச் மாதம் உலகம் முழுக்க கொரோனாத் தொற்று தீவிரமாக இருந்தது. அப்போது இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் முழுவதிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதே போல் ஜோர்டான் நாட்டிலும் கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலிலிருந்த போது, ஊரடங்கை மீறி இளைஞர்கள் சிலர் போலி இறுதிச் சடங்கை நடத்தினர். அப்போது திடீரென்று சைரன் அபாய ஒலி சப்தம் கேட்டு அனைவரும் தப்பி ஓடினர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Archive

பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் ஆண்டாண்டு காலமாக தாக்குதல் நடத்தி வருகிறது. 2023ம் ஆண்டு செப்டம்பரில் தாக்குதல் தீவிரமடைந்தது. ஓராண்டு ஆன நிலையில் இஸ்ரேலின் தாக்குதல் லெபனான், ஏமன் என்று அண்டை நாடுகளுக்கும் விரிவடைந்துள்ளது. இதில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். ஆனால், இந்த வீடியோ பாலஸ்தீனியர்கள் நடத்திய நாடகம் இல்லை. 2020ம் ஆண்டு கொரோனா உச்சத்திலிருந்த போது ஜோர்டான் நாட்டு இளைஞர்கள் நடத்திய நாடகம் இது என்பது தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

ஜோர்டானில் கொரோனா ஊரடங்கு உத்தரவை மீறி இளைஞர்கள் போலி இறுதிச்சடங்கு நாடகம் நடத்திய வீடியோவை காஸாவில் நடந்தது போல தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram
Claim Review :   இஸ்ரேல் மீது குற்றம்சாட்டும் நோக்கில் காஸாவில் போலியான இறுதிச் சடங்கு நடத்தப்பட்டதா?
Claimed By :  Social Media Users
Fact Check :  FALSE