
‘’பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ ஜெய் இஸ்ரேல் 🔥🔥🔥
தீவிரவாதிகளுக்கு பாலாஷ்தீனம் அடைக்கலம் கொடுத்ததால் தான் இன்று இஸ்ரேல் வச்சு செய்றான்…
தமிழ்நாட்டில் தீவிரவாதிகளுக்கு நாம் இடம் கொடுத்தால் நாளைக்கு தமிழ்நாடு சுடுகாடு ஆகும்…,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் தொடர்பான வீடியோ, என்று தெரியவந்தது.

இஸ்ரேல் போர்க்குற்றம் செய்வதற்கான ஆதாரம் என்று கூறி, இந்த வீடியோ காட்சியை கடந்த ஜூலை மாதம் (2025) ஈரான் வெளியிட்டுள்ளது. கூடுதல் செய்தி ஆதாரம் இதோ…

Hindustan Times l TRT World l The New Arab
மேலும், குறிப்பிட்ட வீடியோ காட்சியில், கட்டிடம் ஒன்றின் மீது ஈரான் தேசியக்கொடி பறப்பதையும் தெளிவாகக் காண முடிகிறது. அதேசமயம், பாலஸ்தீனக் கொடி வேறொன்றாக உள்ளது.

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோ பற்றிய தகவல் தவறானது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் காட்சி இதுவா?
Fact Check By: Pankaj IyerResult:Missing Context
