‘’ஊட்டி போல் ஜில்லென மாறிய சென்னை,’’ என்று கூறி பத்திரிகையாளர் செந்தில்வேல் பதிவு ஒன்றை வெளியிட்டதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ஊட்டி போல் ஜில்லென மாறிய சென்னை… மக்கள் மகிழ்ச்சி.. முன்புபோல் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கவில்லை என டீ கடையில் முதியவர் பேசினார். தளபதியின் சிறப்பான ஆட்சிக்கு இதுவே சாட்சி,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர் செந்தில்வேல் இந்த பதிவை அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டது போன்றுள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சென்னை மாநகர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் சமீபத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சமூக வலைதளங்களிலும் பல்வேறு வதந்திகள் பகிரப்படுகின்றன. அவை பற்றி நாமும் கூட அவ்வப்போது ஃபேக்ட்செக் வெளியிட்டு வருகிறோம்.

Fact Crescendo Tamil Link 1 l Fact Crescendo Tamil Link 2 l Fact Crescendo Tamil Link 3

இந்த வரிசையில் பகிரப்படும் மற்றொரு வதந்திதான் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவலும். ஆம், இவ்வாறு பத்திரிகையாளர் செந்தில்வேல் எந்த பதிவும் ஃபேஸ்புக் அல்லது எக்ஸ் வலைதளத்தில் வெளியிடவில்லை. இதுபற்றி அவரது தரப்பிலும் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம்.

எனவே, செந்தில்வேல் பெயரில் வேண்டுமென்றே இவ்வாறு வதந்தி பரப்பியுள்ளனர், என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:'ஊட்டி போல் ஜில்லென மாறிய சென்னை' என்று பத்திரிகையாளர் செந்தில்வேல் பதிவிட்டாரா?

Written By: Fact Crescendo Team

Result: False