
‘’சீமானுக்கும் பங்காரு அடிகளாருக்கும் எந்த தொடர்பும் இல்லை’’ என்று மேல்மருவத்தூர் சித்தர் பீடம் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’எந்த காலத்திலும் பங்காரு அடிகளார் அவர்களுக்கும் சீமானுக்கும் எந்த ஒரு தொடர்பும் இருந்ததில்லை என்பதை தெளிவுப்படுத்துகிறோம். அவர் என்ன கதை விட்டாலும் அதை யாரும் நம்ப வேணாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
பார்க்க, Melmaruvathur Adhiparasakthi Siddhar Peedam வெளியிட்ட அறிக்கை போன்று இருப்பதால், பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
‘மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மா’ என்று ஆன்மீக பக்தர்களால் அழைக்கப்பட்டு வந்த பங்காரு அடிகளார் சமீபத்தில் இயற்கை எய்தினார்.
இந்த நிலையில், பங்காரு அடிகளார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த சீமான் ‘’நானும் பங்காரு அடிகளாரும் அப்பா – மகன் போல,’’ என்று குறிப்பிட்டிருந்தார்.
சீமான் இவ்வாறு பேசியதை விமர்சித்து பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் பகிரப்படும் போலியான அறிக்கைதான் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவலும்…
ஆம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் அலுவலகத்தில் நாம் பேசி, இது போலியான அறிக்கை என்று உறுதிப்படுத்தியுள்ளோம்.
மேலும், கடந்த 2021ம் ஆண்டு சீமான் பங்காரு அடிகளாரை நேரில் சந்தித்து பேசியுள்ளார் என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:‘சீமானுக்கும் பங்காரு அடிகளாருக்கும் எந்த தொடர்பும் இல்லை’ என்று மேல்மருவத்தூர் சித்தர் பீடம் கூறியதா?
Written By: Fact Crescendo TeamResult: False
