
‘’நெதர்லாந்து அரசு வெளியிட்ட ஆர்எஸ்எஸ் நினைவு அஞ்சல் தலை,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ நமது ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் (RSS) 100 ஆண்டுக்கால சமூகப் பணிகளை குறிக்கும் வகையில் நெதர்லாந்து அரசு ஒரு நினைவு அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளது. இது சர்வதேச அங்கீகாரத்தின் குறிப்பிடத்தக்க அடையாளமாகும்.,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இதற்கும், நெதர்லாந்து அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை, என்று தெரியவந்தது. ஆம், குறிப்பிட்ட தபால் தலை பற்றிய அறிவிப்பின் மேலே உள்ள லோகோ மற்றும் கீழே தரப்பட்டுள்ள வங்கிக் கணக்கு ஆகியவற்றில் Stichting Hindu Swayamsevak Sangh -Netherland என்று எழுதப்பட்டுள்ளது.

இதன்படி, இது நெதர்லாந்து நாட்டில் செயல்படும் Hindu Swayamsevak Sangh என்ற அமைப்புக்குச் சொந்தமான வங்கிக் கணக்கு என்பது தெளிவாகிறது. இது ஆர்எஸ்எஸ் அமைப்பின் சர்வதேச பிரிவு ஆகும்.

கூடுதல் செய்தி ஆதாரம் இதோ…
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தபால் தலைக்கும், நெதர்லாந்து அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram
Title:நெதர்லாந்து அரசு ஆர்எஸ்எஸ் நினைவு அஞ்சல் தலை வெளியிட்டதா?
Fact Check By: Pankaj IyerResult: Misleading


