கர்நாடகாவில் மெட்ரோ தூண் சாய்ந்து தாய் – மகள் பலி என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

பாஜக ஆளும் கர்நாடகாவில் ஊழல் தலைவிரித்தாடுகிறது, இதன் காரணமாக மெட்ரோ தூண் சாய்ந்து தாய் மகள் பலி என்று நியூஸ் 7 தமிழ் வெளியானது போல ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive

நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “பாஜக ஆளும் கர்நாடக மாநில பெங்களூரில் தலைவிரித்தாடும் ஊழல் காரணமாக மெட்ரோ தூண் சாய்ந்து தாய் மகள் பலி. இதனால் மொத்த பெங்களூரு மெட்ரோ கட்டுமானத்தின் மீதே மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நியூஸ் கார்டை Anu (@anu_sud) என்ற ட்விட்டர் ஐடி கொண்டவர் 2023 ஜனவரி 12ம் தேதி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

Selvin Joseph என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 ஜனவரி 12ம் தேதி ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இவர்களைப் போல பலரும் இந்த நியூஸ் கார்டை பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கர்நாடகாவில் சமீபத்தில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கக் கட்டப்பட்டு வரும் தூண் சரிந்து தாய், மகன் உயிரிழந்தனர். ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் தாய், மகள் உயிரிழந்தனர் என்று தவறாகக் குறிப்பிட்டுள்ளனர். இந்த சம்பவத்துக்கு பா.ஜ.க அரசின் ஊழல் காரணம் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

பொதுவாக தலைவர்கள் கூறிய கருத்து, சம்பவங்கள் தொடர்பாகவே காட்சி, இணைய ஊடகங்களில் நியூஸ் கார்டு வெளியிடப்படுகின்றன. இதில், கர்நாடக பா.ஜ.க அரசை ஊழல் அரசு நேரடியாகக் குற்றம்சாட்டி நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு வெளியிட்டது போல பகிரப்பட்டு வருகிறது. ஊடகங்கள் இப்படி நியூஸ் கார்டு வெளியிடாது என்பதாலும், இந்த நியூஸ் கார்டின் டிசைன் வழக்கமாக நியூஸ் 7 தமிழ் வெளியிடும் நியூஸ் கார்டு போல இல்லாததாலும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டோம்.

முதலில் நியூஸ் 7 தமிழின் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் வெளியான நியூஸ் கார்டை பார்வையிட்டோம். நியூஸ் கார்டில் ஜனவரி 12ம் தேதி வெளியிட்டது போல குறிப்பிடப்பட்டிருந்தது. குறிப்பிட்ட அந்த நாளில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று எந்த ஒரு நியூஸ் கார்டும் இல்லை. எனவே, இது போலியானது என்று தெளிவானது. 

இதை உறுதி செய்துகொள்ள நியூஸ் 7 தமிழ் டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளருக்கு இந்த நியூஸ் கார்டை அனுப்பி விவரம் கேட்டோம். அவரும் இது போலியான நியூஸ் கார்டு, இப்படி எந்த ஒரு செய்தியையும் நாங்கள் வெளியிடவில்லை என்றார்.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் பாஜக ஆளும் கர்நாடகாவில் தலைவிரித்தாலும் ஊழல் காரணமாக தாய், மகள் பலி என்று பரவும் நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

கர்நாடகாவில் பா.ஜ.க-வின் ஊழல் ஆட்சி காரணமாக மெட்ரோ தூண் விழுந்து தாய், மகள் உயிரிழப்பு என்று பரவும் நியூஸ் கார்டு போலியானது, தகவலும் பாதி தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:கர்நாடகாவில் மெட்ரோ தூண் சாய்ந்து தாய் – மகள் பலி என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False