தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்துப் பேசியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Claim Link l Archived Link

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’எடப்பாடி என்றால் என்ன பெரிய முதல்வரா, எழுதி வைத்துக் கொள், ஒவ்வொரு தொகுதியிலும் உன் சீட் பறிக்கப்படும்,’’ என்று விஜயகாந்த் மகன் விஜய பிரபாகர் ஆக்ரோஷமாகப் பேசும் காட்சி இடம்பெற்றுள்ளது.

மக்களவைத் தேர்தல் 2024 பிரசாரத்தின்போது, விஜய் பிரபாகர் இவ்வாறு பேசியதாகக் கூறி, இதனை பலரும் உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட செய்தி உண்மையா என்று தகவல் தேடியபோது, கடந்த 2021ம் ஆண்டு கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் நடைபெற்ற தேமுதிக கூட்டத்தில் விஜய பிரபாகரன் இவ்வாறு பேசியதாக, தகவல் கிடைத்தது.

BBC Tamil Link

தற்சமயம், தேமுதிக – அதிமுக இடையே கூட்டணி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, அதிமுக கூட்டணியில் 5 தொகுதிகளில் தேமுதிக போட்டியிடுகிறது.

மேலும், அதிமுக – தேமுதிக கூட்டணி வேட்பாளராக விஜய பிரபாகர், விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக வேட்பாளராக நடிகை ராதிகா சரத் குமார் களம் காண உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Oneindia Tamil Link l Hindu Tamil Link

எனவே, 2021ம் ஆண்டு விஜய பிரபாகர் பேசியதை எடுத்து, தற்போதைய 2024 மக்களவைத் தேர்தலின்போது எடுக்கப்பட்டதாக வதந்தி பரப்புகிறார்கள் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்துப் பேசினாரா?

Written By: Fact Crescendo Team

Result: Misleading