‘’வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவிற்கு சிக்கல்’’ என்று பிரசாந்த் கிஷோர் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

தந்தி டிவி லோகோவுடன் உள்ள இந்த நியூஸ் கார்டில், ‘’ பாஜகவிற்கு சிக்கல் - பிரசாந்த் கிஷோர் கணிப்பு. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் எனவும் 200 இடங்களைத் தாண்டுவதே சிக்கலாக இருக்கும் எனவும் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோர் கூறியுள்ளார். 2019ல் வென்ற பீகார், மகாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பெரும் பின்னடைவை சந்திக்கும் எனவும் அவரது IPAC நிறுவனம் எடுத்த சர்வேயில் தெரிய வந்துள்ளது,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

பலரும் உண்மை என நம்பி, இதனை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட செய்தி முதலில் தந்தி டிவி வெளியிட்டதா என்று தகவல் தேடினோம். அவர்களது சமூக வலைதள பக்கங்களில் எதுவும் காணவில்லை. அடுத்தப்படியாக, இதன் பேரில் தந்தி டிவி டிஜிட்டல் பிரிவு நிர்வாகியிடம் கேட்டபோது, ‘’இதனை நாங்கள் வெளியிடவில்லை. எங்களது பெயரில் வேண்டுமென்றே சிலர் போலியான நியூஸ் கார்டை தயாரித்து பரப்புகிறார்கள்,’’ என்றார்.

மேலும், ‘’பாஜக வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றிபெறும்’’ என்றுதான் பிரசாந்த் கிஷோர் கூறியதாக, சமீபத்தில் ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது.

businesstoday link

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டு ‘எடிட் செய்யப்பட்டது,’ என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:‘வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவிற்கு சிக்கல்’ என்று பிரசாந்த் கிஷோர் கூறினாரா?

Written By: Fact Crescendo Team

Result: False