காவிரி நீரை தமிழ்நாட்டிற்குத் தரக்கூடாது என்று வானதி சீனிவாசன் கூறினாரா?  

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

‘’ காவிரி நீரை தமிழ்நாட்டிற்குத் தரக்கூடாது,’’ என்று வானதி சீனிவாசன் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

பலரும் இவற்றை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.  

உண்மை அறிவோம்:

காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக தமிழ்நாட்டிற்கும், கர்நாடகாவுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. கன்னட அமைப்புகள், அரசியல் கட்சிகள், சினிமா கலைஞர்கள் என பலரும் தற்போது இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளதால், பரபரப்பான அரசியல் சூழல் நிலவுகிறது. 

Maalaimalar Link l Dailythanthi Link 

இத்தகைய சூழலில், காவிரி நீரை தமிழ்நாட்டிற்கு வழங்க வானதி சீனிவாசன் எதிர்ப்பு கூறியதாக, மேற்கண்ட வகையில் புதிய தலைமுறை லோகோவுடன் கூடிய நியூஸ் கார்டு ஒன்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 

இதுதொடர்பாக, புதிய தலைமுறை ஆசிரியர் குழுவை தொடர்பு கொண்டு விசாரித்தபோது, ‘’இது எங்களது பெயரில் பரவும் போலியான செய்தி. வானதி சீனிவாசன் தொடர்பாக நாங்கள் இன்று (09.10.2023) வெளியிட்ட செய்தி ஒன்றை எடுத்து, இவ்வாறு எடிட் செய்து, வதந்தி பரப்பியுள்ளனர்,’’ என்று குறிப்பிட்டனர். 

அவர்கள் வெளியிட்ட உண்மையான நியூஸ் கார்டு கீழே தரப்பட்டுள்ளது. 

உண்மையான நியூஸ் கார்டையும், போலியான நியூஸ் கார்டையும் ஒப்பீடு செய்து, கீழே இணைத்துள்ளோம். 

இதுதொடர்பாக, நாம் வானதி சீனிவாசன் தரப்பிலும் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம். ‘’திமுக அரசு காவிரி விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் கொண்டுவந்த தீர்மானம் முழுமையாக இல்லை என்பதால் வெளிநடப்பு செய்தோமே தவிர, காவிரி நீர் தமிழ்நாட்டிற்குக் கிடைக்கக்கூடாது என்ற உள்நோக்கம் எதுவும் எங்களிடம் இல்லை,’’ என்றனர்.

இதுபற்றி வானதி அவரது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள கணக்கில் வெளியிட்ட பதிவையும் கீழே இணைத்துள்ளோம். 

எனவே, உண்மையான செய்தி வேறொன்றாக இருக்க, அதனை எடிட் செய்து, அரசியல் உள்நோக்கத்துடன் வானதி பெயரில் சிலர் வதந்தி பரப்பி வருவதாகச் சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.  

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram 

Avatar

Title:காவிரி நீரை தமிழ்நாட்டிற்குத் தரக்கூடாது என்று வானதி சீனிவாசன் கூறினாரா?

Written By: Fact Crescendo Team 

Result: ALTERED