Rapid FactCheck: வாட்ஸ்ஆப் தகவல்கள் கண்காணிக்கப்படுகிறதா?- வைரல் வதந்தியால் சர்ச்சை…
‘’வாட்ஸ்ஆப் தகவல்கள் கண்காணிக்கப்படுகின்றன,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
முக்கிய அறிவிப்பு..!!!
********* ***********
வாட்ஸ் அப் மற்றும் வாட்ஸ் அப் வீடியோ கால்களுக்கு நாளை முதல் அரசு புதிய சட்டத்தை அமல்படுத்த உள்ளது...!!!
நீங்கள் அழைக்கும் ஒவ்வொரு கால்களும் பதிவு செய்யப்பட்டு
சேமிக்கப்படும்...!!!
வாட்ஸ் அப்,பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம்,மற்றும் அனைத்து சமூக வளைதளங்களும் கண்காணிக்கப்படும்...!!!
உங்களது செல்போன் இணைப்பு மத்திய அரசின் தகவல் தொடர்புடன் இணைக்கப்படுவதால் தயவுசெய்து யாரும் தவறான தகவல்களை அனுப்ப வேண்டாம்...!!!
சமூக வளைதளங்களை கவனமாக கையாளுமபடி உங்கள் குழந்தைகள்,நண்பர்கள், சொந்தங்கள், சொல்லி வையுங்கள்..!!!
கொரானா, அரசியல், பிரதமர் மற்றும் அரசுக்கு எதிராக எந்த தகவல்களையும் வாட்ஸ் அப்பில் அனுப்ப வேண்டாம்..!!!
அப்படி அனுப்பினால் உங்களை எந்தவித வாரண்டும் இல்லாமல் கைது செய்வார்கள்..!!!
காவல்துறை உங்களுக்கு நோட்டீஸ் கொடுத்து உங்கள் மீது வழக்கு தொடரப்படும்..!!!
குருப்பில் உள்ள அனைவரும் கவனமாக தகவல்களை அனுப்ப
,இதை அனைவருக்கும் தெரியப்படுத்தவும்...!!!
குரூப்பில் உள்ள அனைவருக்கும் வாட்ஸ் அப் புதிய சட்டம் பற்றிய தகவல்...!!!
செல் போனில் நீங்கள் மெசேஜ் அனுப்பிய பின் ஒரு வந்தால் தகவல் அனுப்பபட்டது.
வந்தால் தகவல் போய் சேர்ந்து விட்டது.
இரண்டு ஊதா கலர்வந்தால் தகவல் படிக்கப்பட்டது.
மூன்று ஊதா கலர் அரசு கவனிக்கிறது.
ஒரு ஊதா இரண்டுசிவப்பு வந்தால் அரசு உங்கள் தகவல்களை அரசு கவனிக்கின்றது...
இரண்டு ஊதா
ஒரு சிவப்புவந்தால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கிறது.
மூன்று சிவப்பு வந்தால் உங்கள் மேல் நடவடிக்கை எடுத்து கோர்ட் சம்மன் விரைவில் அனுப்பி வைக்கப்படும்.
ஆகவே நன்கு யோசித்து தகவல்களை அனுப்பவும் மாட்டிக்கொள்ளாதீர்கள்..!!!
இதனை வாசகர்கள் சிலர், +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தனர். இதே தகவலை ஃபேஸ்புக்கிலும் பலர் பகிர்வதைக் கண்டோம்.
Facebook Claim Link I Archived Link
உண்மை அறிவோம்:
மேற்குறிப்பிட்ட தகவலில் உள்ள ஒவ்வொரு வரிக்கும் விரிவான விளக்கம் அளித்து நமது இலங்கை பிரிவினர் ஏற்கனவே ஆய்வுக் கட்டுரை வெளியிட்டுள்ளனர். அதனை சந்தேகங்களுக்கு படித்து தெரிந்துகொள்ளும்படி வாசகர்களை கேட்டுக் கொள்கிறோம்.
Fact Crescendo Sinhala Link I Fact Crescendo Tamil Link I Fact Crescendo English Link
இதுகுறித்து மற்ற ஊடகங்களில் வெளியான செய்தி விவரமும் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் மக்களை பீதியடையச் செய்யும் நோக்கில் பகிரப்படுபவை என்பதால், யாரும் அவற்றை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel
Title:வாட்ஸ்ஆப் தகவல்கள் கண்காணிக்கப்படுகிறதா?- வைரல் வதந்தியால் சர்ச்சை…
Fact Check By: Pankaj IyerResult: False