
‘’யோகி ஆதித்யநாத் கோதுமை வழங்கினார்,‘’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில், மீம்ஸ் ஒன்றை உண்மை போல பகிர்ந்துள்ளனர். முழு மீம்ஸ் கீழே தரப்பட்டுள்ளது.

இதன்படி, யோகி ஆதித்யநாத், கோதுமை மூட்டையை இலவசமாக விநியோகித்தார் என்று ஒருசாரார் தகவல் பகிரும் சூழலில், அது ஏற்புடையதல்ல என்று கூறி மற்றொரு தரப்பினர், அதனை கேலி செய்து மேற்கண்ட வகையில், மீம்ஸ் பகிர்கின்றனர்.
அதனை நமது வாசகர் உண்மைத்தன்மை சரிபார்க்காமல், மேலே உள்ள தகவல் மட்டும் உண்மை என நம்பி ஷேர் செய்துள்ளார். அவர் உண்மை தெரியாமல், இதனை பதிவிட்டுள்ளதாகச் சிலர் கமெண்ட் பிரிவில் குறிப்பிட்டுள்ளதையும் கண்டோம்.

உண்மையில், இந்த புகைப்படம் 2017ம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும். உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அம்பேத்கர் நகர் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்வு தொடர்பானதாகும். இதனை உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலேயே 2017ம் ஆண்டே பகிர்ந்திருக்கின்றனர்.
இதுதொடர்பாக, அப்போதே ஊடகங்களில் கூட செய்தி வெளியாகியுள்ளது.
எனவே, 2017ல் எடுக்கப்பட்ட புகைப்படத்தை எடுத்து, தற்போதைய நிகழ்வுடன் தொடர்புபடுத்தி சிலர் தகவல் பகிர, அதனை மற்றொரு தரப்பினர் கேலி செய்து, மீம்ஸ் வெளியிட்டுள்ளனர். இதன் உண்மைத்தன்மை தெரியாமல், அந்த மீம்ஸை உண்மை போல நம்பி, நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவில் பகிர்ந்துள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel

Title:யோகி ஆதித்யநாத் கோதுமை வழங்கினாரா?- இது 2017ல் எடுத்த புகைப்படம்!
Fact Check By: Pankaj IyerResult: Missing Context
