
‘‘மோடி ஆட்சியில் விமானத்தில் செல்ல காத்திருக்கும் மக்கள்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ டவுன் பஸ்சுக்கு காத்திருப்பது போல் மக்கள் விமானத்தில் செல்ல காத்திருக்கிறார்கள்🤦 மோடி ஆட்சியின் சாதனை😡,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது கடந்த 2018ம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம், என்று தெரியவந்தது.

இதன்படி, கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் பெங்களூரில் இருந்து டெல்லிக்கு செல்லவிருந்த விமானம் ஏழு மணி நேரம் தாமதமாக சென்றது. இதனால், அதில் செல்ல வேண்டிய பயணிகள் அவதியுற்றனர். இதுதொடர்பான புகைப்படத்தை எடுத்து, தற்போதைய இண்டிகோ நிறுவன பிரச்னையுடன் சேர்த்து, வதந்தி பரப்புகிறார்கள்.
கூடுதல் செய்தி ஆதாரம் இதோ…
Times of India l Economic Times
எனவே, பழைய புகைப்படத்தை எடுத்து, புதியது போன்று தவறான தகவல் பரப்புகிறார்கள், என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram
Title:மோடி ஆட்சியில் விமானத்தில் செல்ல காத்திருக்கும் மக்கள் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Fact Check By: Pankaj IyerResult: Misleading


