
‘’மோடி வருகையின்போது, பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அனுமதி மறுப்பு,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ அண்ணாமலையின் எதிர்கால வாழ்க்கையை நிகழ்காலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர் தான் பொன்.ரா.. அட பாவமே.. பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அனுமதி மறுப்பு. கன்னியாகுமரி: பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி மறுப்பு,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
புதிய தலைமுறை லோகோ உள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது கடந்த 2024ம் ஆண்டு வெளியிடப்பட்ட செய்தி, என்று தெரியவந்தது.
ஆம், 2024ம் ஆண்டு மே மாதம் பிரதமர் மோடி 3 நாள் பயணமாக, கன்னியாகுமரி வந்தார். அப்போது, அவர் தங்குவதற்காக, ஏற்பாடு செய்யப்பட்ட அரசு விருந்தினர் மாளிகையை பார்க்க பொன். ராதாகிருஷ்ணன் சென்றார். ஆனால், அவருக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக, போலீசார் அனுமதி மறுத்தனர். இந்த செய்தி பல்வேறு ஊடங்களிலும் அப்போது வெளிவந்தது.
Dinakaran Link l Dinamalar Link
இதே செய்தியை புதிய தலைமுறை ஊடகமும் வெளியிட்டிருந்தது.
இதனையே தற்போது பகிர்ந்து, மோடி சமீபத்தில் தமிழ்நாடு வந்துசென்ற நிகழ்வுடன் தொடர்புபடுத்தி வதந்தி பரப்புகிறார்கள், என்று தெளிவாகிறது.
மேலும், புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவு நிர்வாகியிடமும் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம்.
எனவே, பழைய செய்தியை எடுத்து, அரசியல் உள்நோக்கத்துடன் சமூக வலைதளங்களில் தற்போது பரப்புகிறார்கள், என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அனுமதி மறுப்பு என்று பரவும் செய்தி உண்மையா?
Written By: Pankaj IyerResult: Misleading
