‘’சங்கிகளுக்கு அனுமதி இல்லை’’ என்று அடையார் ஆனந்த பவன் உணவகம் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ மாட்டுச்சாணம் சாப்பிடுபவர்கள் மாற்றுப் பாதையில் செல்லவும். சங்கிகளுக்கு அனுமதி இல்லை – இப்படிக்கு நிர்வாகம்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

A2B Veg Restaurant பெயர் உள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சமீபத்தில் அடையார் ஆனந்த பவன் ஓட்டலின் உரிமையாளர் கே.டி.சீனிவாச ராஜா, சித்ரா லஷ்மணன் நடத்தும் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில், ‘’வெஜ் ஹோட்டல் தொழிலில் பிராமண ஆதிக்கம் இருந்தது. ஆனால், யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று மாற்றிக்காட்டியவர் தந்தை பெரியார். அவர் தான் எங்களது வளர்ச்சிக்கு அடிப்படை காரணம்,’’ என்று பேசினார்.

இந்த பேட்டி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Zee News Tamil Link

இந்நிலையில், ‘’சங்கிகளுக்கு அனுமதி இல்லை’’ என்று அடையார் ஆனந்த பவன் உணவகம் கூறியதாக, சமூக வலைதளங்களில் வேகமாக தகவல் பகிரப்படுகிறது.

ஆனால், ‘’இவ்வாறு எந்த அறிவிப்பும் நாங்கள் வெளியிடவில்லை. எங்களது பெயரில் சிலர் வேண்டுமென்றே எடிட் செய்த புகைப்படம் ஒன்றை வைத்து, வதந்தி பரப்புகிறார்கள்,’’ என்று அடையார் ஆனந்த பவன் தரப்பில் நமக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது.

எனவே, இது ஒரு அடிப்படை ஆதாரமற்ற போலியான செய்தி என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:‘சங்கிகளுக்கு அனுமதி இல்லை’ என்று அடையார் ஆனந்த பவன் உணவகம் கூறியதா?

Written By: Fact Crescendo Team

Result: False