
பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் பதஞ்சலி பீஃப் பிரியாணி என்ற பெயரில் மசாலாவை விற்பதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: twitter.com I Archive
ராம்தேவ் பீஃப் பிரியாணி என்று மசாலா பாக்கெட் ஒன்றின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. பதஞ்சலி நிறுவனத்தின் வெளியீடு என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மாட்டுக்கறி வைத்திருந்தான் என எத்தனை மனிதர்களை அடித்தே கொலை செய்தீர்கள் பாவிகளா” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த புகைப்படத்தை இரத்தினவேலு வசந்தா. என்ற பெயர் கொண்ட @vasantalic ட்விட்டர் ஐடி கொண்ட நபர் 2022 செப்டம்பர் 22ம் தேதி பதிவிட்டுள்ளார்.

உண்மைப் பதிவைக் காண: Facebook
ஃபேஸ்புக்கிலும் இந்த புகைப்படத்தை சிலர் பதிவிட்டு வருகின்றனர். சேலத்தார் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 செப்டம்பர் 23ம் தேதி பதிவிட்டுள்ளார். நிலைத் தகவலில், “இங்கு பலர் புரிந்து கொள்ளாமல் இருப்பது ஒன்றுதான்… தான் செய்தால் சரி அதுவே பிறர் செய்தால் தவறு. மாட்டுக்கறி வைத்திருந்தான் என எத்தனை மனிதர்களை அடித்தே கொலை செய்தார்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
உண்மை அறிவோம்:
பிரபல யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் பீஃப் பிரியாணி மசாலாவை விற்பனை செய்வதாக சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். ஆனால், புகைப்படம் எடிட் செய்யப்பட்டது போல உள்ளது. எனவே, இந்த படம் பற்றி ஆய்வு செய்தோம்.
படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது நேஷனல் என்ற பெயரில் பீஃப் பிரியாணி மசாலா விற்பதாக ஒரு புகைப்படம் கிடைத்தது. நேஷனல் பிரியாணி மசாலா அட்டைப் படத்தை எடிட் செய்திருப்பது தெளிவாகத் தெரிந்தது. மேலும், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் பக்கவாட்டில் நேஷனல் என்று தெரிவதைக் காண முடிந்தது.

உண்மைப் பதிவைக் காண: nfoodsstore.com I Archive
ஒருவேளை நேஷனல் நிறுவனம் பதஞ்சலிக்கு உரிமையானதா என்று அறிய ஆய்வைத் தொடர்ந்தோம். நேஷனல் ஃபீப் பிரியாணி மசாலா என்று கூகுளில் டைப் செய்து தேடினோம். அப்போது அந்த நிறுவனத்தின் இணையதளம் நமக்குக் கிடைத்தது. அதில், அந்த நிறுவனம் பாகிஸ்தான் சமையலின் ருசியை அறிய எங்கள் நிறுவனப் பொருட்களை பயன்படுத்துங்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிறுவனத்தின் முகவரி என அமெரிக்காவில் உள்ள ஒரு முகவரியைக் கொடுத்திருந்தனர்.

பதஞ்சலி நிறுவனத்தில் ஏதேனும் அசைவ உணவுக்கான மசாலா விற்பனை செய்யப்படுகிறதா என்று தேடிப் பார்த்தோம். அப்போது ராம்தேவ் என்ற பெயரில் ஒரு மசாலா நிறுவனம் செயல்பட்டு வருவது தெரிந்தது. அதற்கும் பதஞ்சலிக்கும் தொடர்பில்லை. அது Hasmukhbhai Patel என்பவரால் குஜராத்தில் தொடங்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பதஞ்சலி நிறுவனம் சார்பில் பீஃப் உள்ளிட்ட அசைவ உணவு மசாலாக்கள் விற்பதாக எந்த தவலும் கிடைக்கவில்லை.

உண்மைப் பதிவைக் காண: nfoodsstore.com I Archive
இதன் மூலம், அமெரிக்காவில் விற்பனையாகும் ஒரு மசாலா பொருளின் அட்டையை எடுத்து எடிட் செய்து போலியாகப் பதஞ்சலி பீஃப் பிரியாணி மசாலா விற்பனை செய்யப்படுவதாக வதந்தி பரப்பி வருவது இதன் மூலம் உறுதியாகிறது.
முடிவு:
பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் பீஃப் பிரியாணி மசாலா விற்பதாக பரவும் படம் எடிட் செய்யப்பட்டது, போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் பீஃப் பிரியாணி மசாலா விற்கிறதா?
Fact Check By: Chendur PandianResult: Altered
