
‘’நாகைக்கு வரும் எங்கள் நாயே வருக,’’ என்று கூறி த.வெ.க., தொண்டர்கள் பேனர் பிடித்ததாகக் குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில் உள்ள புகைப்படத்தில், ‘’நாகைக்கு வரும் எங்கள் நாயே வருக,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது ஒரு எடிட் செய்யப்பட்ட புகைப்படம், என்று தெரியவந்தது. இதுபற்றி த.வெ.க., தலைமைக் கழக அலுவலகத்தை தொடர்புகொண்டு கேட்டபோது, ‘’எங்கள் கழகத் தலைவர் விஜய் பற்றி எதிர்க்கட்சியினர் வேண்டுமென்றே அரசியல் உள்நோக்கத்துடன் இதுபோன்ற எடிட் செய்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்புகிறார்கள்,’’ என்று தெரிவித்தனர்.
இதேபோன்று, த.வெ.க., பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அலுவலகத்திலும் பேசி, குறித்த புகைப்படம் உண்மையானதல்ல, என்று உறுதிசெய்துள்ளோம்.

Nellai District TVK IT Wing வெளியிட்ட X வலைதள பதிவில் உண்மையான புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில் ‘’நாகைக்கு வரும் எங்கள் நாளைய தீர்ப்பே வருக,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

உண்மையான புகைப்படத்தையும், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் ஒப்பீடு செய்து, இங்கே இணைத்துள்ளோம்.

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல், அரசியல் உள்நோக்கத்துடன் பகிரப்படும் ஒரு வதந்தி, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:விஜய் ‘நாய்’ என்று கூறி த.வெ.க., தொண்டர்கள் பேனர் பிடித்தனரா?
Fact Check By: Pankaj IyerResult: Altered
