
‘’பொது இடத்தில் பெண் ஒருவரை கட்டிப்பிடித்த ஆ.ராசா,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ ஆமா இந்த போஸ்ட் சுத்திட்டு இருக்கே அது யாரு உங்களுக்கு தெரியுமா தெரிஞ்சா சொல்லுங்க #திமுகவின்_சமூகநீதி_வேடம்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது ஒரு எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என்று, தெரியவந்தது.
இதன்படி கடந்த 2019ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அதில், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா (UBT) கட்சி உறுப்பினர்கள் வெற்றி பெற்று, முதல் நாள் சட்டமன்ற கூட்டத்திற்கு வந்தபோது, NCP – SP கட்சியை சேர்ந்த எம்.பி., சுப்ரியா சூலே (சரத் பவார் மகள்) அவர்களை வரவேற்றார். மேலும், சிவசேனா (UBT) கட்சியின் இளைஞரணி தலைவர் ஆதித்யா தாக்கரேவை சுப்ரியா சூலே ஆரத்தழுவினார்.
இதுதொடர்பான புகைப்படத்தை எடுத்து, வேண்டுமென்றே எடிட் செய்து,
ஆ. ராசா பற்றி வதந்தி பரப்புகிறார்கள்.
கூடுதல் செய்தி ஆதாரம் இதோ…
Amarujala l New Indian Express l Mumbai Mirror
உண்மையான புகைப்படத்தையும், எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தையும் ஒப்பீடு செய்து, கீழே இணைத்துள்ளோம்.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படம் உண்மையானதல்ல, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:பொது இடத்தில் பெண் ஒருவரை கட்டிப்பிடித்த ஆ.ராசா என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Written By: Pankaj IyerResult: Altered
