
‘வெயில் காலம் என்பதால், தமிழக மக்களுக்கு பாஜக.,வினர் கோமிய பானம் விநியோகிக்க வேண்டும்,’’ என்று அண்ணாமலை கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட செய்தி பற்றி விவரம் கேட்டபோது, ‘‘இதனை நாங்கள் வெளியிடவில்லை. சமீபத்தில், கோடை காலம் என்பதால், பாஜக.,வினர் ஆங்காங்கே தண்ணீர் பந்தல் அமைத்து, பொதுமக்களின் தாகம் தணிக்க முன்வரும்படி அண்ணாமலை அறிக்கை வெளியிட்டிந்தார். அந்த அறிக்கையை இவ்வாறு எடிட் செய்து, யாரோ வேண்டுமென்றே விஷமத்தனமான தகவல் பரப்பியுள்ளனர்,’’ என்று தமிழ்நாடு பாஜக ஐடி பிரிவு தரப்பில் விளக்கம் அளித்தனர்.
உண்மையான அறிக்கை லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.
இரண்டு அறிக்கைகளையும் ஒப்பீடு செய்து, அதனை இங்கே இணைத்துள்ளோம்.

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல், அண்ணாமலை பெயரில் பகிரப்படும் போலியான ஒன்று என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:பாஜக.,வினர் கோமிய பானம் விநியோகிக்க வேண்டும் என்று அண்ணாமலை கூறினாரா?
Fact Check By: Fact Crescendo TeamResult: False
