
பிரியாணி சாப்பிட்டதால் தனக்கு ஆண்மைக் குறைவு ஏற்பட்டது என்று அர்ஜூன் சம்பத் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
அர்ஜூன் சம்பத் புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “பிரியாணியால் எனக்கு ஆண்மைக்குறைவு ஏற்பட்டுள்ளது. பிரியாணி ஆண்மைக் குறைவு ஏற்படுத்தும் என்பது உண்மைதான். பாதிக்கப்பட்டவன் என்ற முறையில் நான் இதை பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளேன். சிறுவயதில் பிரியாணியை தவிர்த்திருந்தால் இன்று என் மனைவியுடன் இருந்திருப்பேன். – இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத்” என்று இருந்தது.
இந்த பதிவை Barsin Barakath என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 மார்ச் 14ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதை தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
பிரியாணி சாப்பிடுபவர்கள் இந்துக்கள் இல்லை என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக சில நாட்களுக்கு முன்பு போலியான நியூஸ் கார்டு பரவியது. அது தொடர்பாக நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில் இந்து மக்கள் கட்சித் தலைவர் பிரியாணி சாப்பிட்டதால்தான் தனக்கு ஆண்மைக் குறைவு ஏற்பட்டது என்று கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
இந்த நியூஸ் கார்டின் தமிழ் ஃபாண்ட் வழக்கமாக கதிர் என்ற இணைய ஊடகம் வெளியிடும் நியூஸ் கார்டில் இருப்பது போல இல்லை. மேலும், அதில் உள்ளக் கருத்து விஷமத்தனமாக இருந்தது. எனவே, இந்த நியூஸ் கார்டு தொடர்பாக ஆய்வு செய்தோம்.
உண்மையில் அர்ஜூன் சம்பத் இப்படி ஏதும் பேட்டி அளித்திருந்தால் அது தொடர்பாக எல்லா ஊடகங்களிலும் செய்தி வெளியாகி இருக்கும். அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை. எனவே, கதிர் செய்திகள் ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்வையிட்டோம். அதில், அர்ஜூன் சம்பத் தொடர்பாக எந்த நியூஸ் கார்டும் இல்லை.
ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு மீது “FAKE” என்று முத்திரை குத்தி பொய் பரப்புரைகளை நம்ப வேண்டாம் என்று கதிர் நியூஸ் பதிவு வெளியிட்டிருந்தது.
இதன் மூலம் இந்த நியூஸ் கார்டு கதிர் வெளியிட்டது இல்லை என்று உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது, விஷமத்தனமானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
பிரியாணி சாப்பிட்டதால் ஆண்மை பறிபோனது என்று அர்ஜூன் சம்பத் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:பிரியாணி சாப்பிட்டதால் ஆண்மைக்குறைவு ஏற்பட்டது என்று அர்ஜூன் சம்பத் கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: False
