‘’பிராமணர் சங்க முன்னாள் தலைவர் நாராயணன் என்னை பலமுறை மிரட்டி கற்பழித்துள்ளார்,’’ என்று பாடகி சின்மயி கூறியதாக ஒரு செய்தி, சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா எனக் கேட்டார். இதன்பேரில், ஃபேஸ்புக்கிலும் பலர் இந்த செய்தியை ஷேர் செய்வதைக் கண்டோம்.

Facebook Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:
பாடகி சின்மயி, சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிப்பது வழக்கமாகும். ஆனால், மேற்கண்ட வகையில், அவர் நேரடியாக நாராயணன் மீது பாலியல் புகார் எதுவும் கூறியதில்லை.

உண்மையில், கடந்த 2018ம் ஆண்டில் பெயர் வெளியிட விரும்பாத பெண் ஒருவர், ட்விட்டர் வழியே சின்மயிக்கு, நாராயணன் பற்றி புகார் கூறியிருந்தார். அதனை ஸ்கிரின்ஷாட் எடுத்து, சின்மயி பகிர்ந்திருந்தார்.

இதுபற்றி ஊடகங்களிலும் அப்போதே செய்தி வெளியாகியுள்ளது.

The News Minute Link

அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் புகாரையே சின்மயி பகிர்ந்திருந்தார். அதனை தவறாகப் புரிந்துகொண்ட சிலர், நாராயணன் பற்றி சின்மயி நேரடியாக பாலியல் புகார் கூறினார் என்று மேற்கண்ட தகவலை பகிர்ந்து வருகின்றனர்.

எனவே, நாம் ஆய்வு மேற்கொண்ட தகவலில் உண்மையை திரித்துக் கூறியுள்ளனர் என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:தமிழ்நாடு பிராமணர் சங்க முன்னாள் தலைவர் நாராயணன் பற்றி சின்மயி கூறியது என்ன?

Fact Check By: Pankaj Iyer

Result: Partly False