
‘’கம்பர் பிறந்த தேரழுந்தூரில் உள்ள அவரது வீட்டின் இன்றைய நிலை’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ #கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும்’ என்பார்கள். ஆனால் #மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள அவர் பிறந்த #தேரழுந்தூரில் இன்று அவரது வீடும் இல்லை, கவிபாட கட்டுத்தறியும் இல்லை.⚜️🚩
கம்பர் பிறந்த இடமாக இந்தியத் தொல்லியல்
துறை முள்வேலியிட்டு அடையாளப்படுத்தி உள்ள இடம்” என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா, என்று தகவல் தேடினோம். அப்போது, இது தவறான தகவல், என தெரியவந்தது. ஆம், இவர்கள் பரப்பும் புகைப்படம் தேரழுந்தூரில் உள்ள ஆமருவிப் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான வசந்த மண்டபத்தின் பழைய படம். ஆனால், அந்த இடம் ஏற்கனவே சீரமைக்கப்பட்டுவிட்டது.
இதுபற்றி தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ ஃபேக்ட்செக் குழு (TN Factcheck) சம்பந்தப்பட்ட ஆமருவிப் பெருமாள் கோயில் நிர்வாகத்திடம் பேசி உறுதிப்படுத்தியுள்ளது.
இது மட்டுமின்றி, தேரழுந்தூரில் உள்ள கம்பர் மேடு (வீடு இருந்த இடம்) மற்றும் கம்பர் கோட்டம் ஆகிய இடங்களின் தற்போதைய புகைப்படங்களையும் TN Factcheck வெளியிட்டுள்ளது.
இறுதியாக, தேரழுந்தூரில் வசிக்கும் நபர் ஒருவர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று, வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார். அதனையும் கீழே ஆதாரத்திற்காக, இணைத்துள்ளோம்.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படத்திற்கும், கம்பர் வீடு இருந்த இடத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:கம்பர் பிறந்த ஊரில் உள்ள அவரது வீட்டின் இன்றைய நிலை என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Written By: Pankaj IyerResult: Misleading
